செய்திகள் :

திருப்பத்தூர்: பணிகள் நிறைவடைந்தும் திறக்கப்படாத ரயில்வே மேம்பாலம் - சிரமத்தில் மக்கள்!

post image

நாட்றம்பள்ளி- திருப்பத்தூரை இணைக்கும் நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த சோமநாயக்கன்பட்டி ரயில்வே மேம்பாலப் பணிகள் சில மாதங்களுக்கு முன்பு முழுமையாக நிறைவடைந்தது. எனினும், இன்றுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படாமல் இருப்பதால், வாகன ஓட்டிகள் 5 கி.மீ வரை சுற்றிச் செல்ல வேண்டிய சிரமமான சூழல் நிலவுகிறது. மேலும் போக்குவரத்து இடையூறும் ஏற்படுகிறது.

இது தொடர்பாக நம்மிடம் வந்து பேசிய 'சமூக ஆர்வலர்கள்', ``தினந்தோறும் பணிக்குச் செல்லக் கூடியவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லக் கூடியவர்கள் என அனைவரும் பாலம் திறக்கப்படாமல் உள்ளதால், பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மக்களின் வரிப்பணத்திலிருந்துதான் மக்கள் பயன்பாட்டுக்காக இந்த மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. எனவே, துறை சார்ந்த அமைச்சர், அதிகாரிகள் உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு இந்த மேம்பாலத்தைத் திறந்து வைத்தால், அனைவரும் பயனடைவார்கள்" என்றனர். 

இது குறித்து வாகன ஓட்டிகளிடம் விசாரித்தபோது, ``இந்த மேம்பாலம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வந்தது . இதுதான் இப்படி என்று பார்த்தால், திறப்பதற்கும் இதே நிலைமைதான் போல. ஆரம்பத்தில் ரயில்வே கேட்டை கடந்துதான் சென்று கொண்டிருந்தோம். வேலைக்குச் சரியான நேரத்தில் செல்ல முடியாது. பிள்ளைகளையும் ஸ்கூலுக்கு அழைத்துச் செல்ல மிகவும் சிரமமாக இருக்கும். பின்னர் மேம்பாலம் கட்டுகிறோம் என்று இந்த வழியை முழுமையாக அடைத்து விட்டார்கள். தினமும் 5 கி.மீ வரை சுற்றிக் கொண்டுதான் எங்கள் ஊருக்குச் செல்வோம். பெட்ரோல் விற்கும் விலைவாசிக்கு, சமாளிக்க முடியவில்லை. மேம்பாலத்தை விரைந்து திறக்க நடவடிக்கை எடுத்தால், இந்தப் பகுதியின் போக்குவரத்து வசதி மேம்படும்" என்றனர்.

மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுத் திறக்கப்படாமல் இருப்பது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டபோது, ``ஒரு சில நிர்வாக காரணங்களால் மேம்பாலம் திறப்பதற்குச் சற்று தாமதம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. பொதுமக்களின் நலன் கருதி மேம்பாலத்தை விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்கிறோம்" என்றனர்.

பழனி: சுகாதார சீர்கேட்டைச் சுட்டிக்காட்டிய விகடன்; சாக்கடைகளை மூடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ள காந்தி ரோடு சாலையானது பல்வேறு வணிக நிறுவனங்கள், கோயில்கள் மற்றும் காய்கறி மார்க்கெட் அமைந்துள்ள பிரதான சாலையாகும். இதே சாலையில்தான் மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகமும... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: சிதிலமடைந்த பேருந்து நிழற்குடை; அச்சத்தில் பயணிகள்! - சீரமைக்கப்படுமா?

திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திரியாலம் என்ற கிராமத்தின் அருகே மிகவும் சிதிலமடைந்த நிலையில் பயணியர் நிழற்குடை ஒன்று உள்ளது. இவ்விடத்தில் நாட்றம்பள்ளி, பச்சூர், பர்கூர் மற்றும் பிற ஊர்களுக்குச்... மேலும் பார்க்க

SEBI Chief : 'அறிவிக்கப்பட்ட அடுத்த செபி தலைவர்!' - யார் இந்த துஹின் காந்தா பாண்டே?!

இன்றோடு தற்போதைய செபி தலைவர் மாதபி பூரி புச்சின் பணிக்காலம் முடிவடைகிறது. இதையொட்டி, அடுத்த செபி தலைவராக தற்போது நிதி செயலாளராக இருக்கும் துஹின் காந்தா பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். செபி தலைவரின் பணிக... மேலும் பார்க்க

அமெரிக்காவில் கோமாவில் இருக்கும் மகள்; கிடைக்காத விசா... தவிக்கும் இந்திய மாணவியின் பெற்றோர்!

அமெரிக்காவில் படித்து வரும் இந்திய மாணவி நீலம் ஷிண்டே. இவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் ஆவார். கடந்த பிப்ரவரி 14-ம் தேதி இவருக்கு அமெரிக்காவில் பயங்கர விபத்து ஒன்று நடந்துள்ளது. அதில் இவருக்கு மார்பு ம... மேலும் பார்க்க

`Gold card' US visa: அமெரிக்க குடியுரிமை வேண்டுமா? -ட்ரம்ப் அறிமுகப்படுத்திய புதிய வழி! |Explained

`Gold card' US visa - இதோ வந்துவிட்டது அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அடுத்த அதிரடி அறிவிப்பு.ஒருபக்கம் அமெரிக்கர் அல்லாதவர்கள் அமெரிக்க குடியுரிமை பெறுவதில் கடுமையான சட்ட திட்டங்களை வகுத்து வருகிற ட்ரம்... மேலும் பார்க்க

Preity Zinta: "BJPயிடம் என் சமூக வலைத்தளக் கணக்கைக் கொடுத்து பணம் வாங்கினேனா?" - பிரீத்தி ஜிந்தா

பிரபல பாலிவுட் நடிகையாகவும், ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணியின் உரிமையாளருமாக இருப்பவர் நடிகை பிரீத்தி ஜிந்தா.'எக்ஸ்' வலைத்தளத்தில் தனக்கென 6 மில்லியம் ஃபாலோவர்ஸை வைத்திருக்கிறார் பிரீத்தி ஜிந்தா. சமீபத... மேலும் பார்க்க