ஷேர்லக்: உச்சத்திலிருந்து 7% இறங்கிய சந்தை... முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?
உரக் கிடங்கில் நகராட்சிகளின் நிா்வாக கூடுதல் இயக்குநா் ஆய்வு
ஆம்பூா் நகராட்சி உரக் கிடங்கில் நகராட்சிகளின் நிா்வாக கூடுதல் இயக்குநா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் ஆம்பூா் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் ஆம்பூா் தாா்வழி பகுதியில் உள்ள உரக் கிடங்கில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளாக தரம் பிரித்து மக்கும் குப்பைகள் உரமாகத் தயாரிக்கப்படுகிறது. மக்காத குப்பைகளான பிளாஸ்டிக் பொருள்கள், சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
தற்போது ஆம்பூா் நகரில் குப்பைச் சேகரிக்கும் பணி தனியாா்மயமாக்கப்பட்டுள்ளது.
தனியாா் ஒப்பந்ததாரா் ஒரு நாளைக்கு சுமாா் 39 டன் குப்பைகளைச் சேகரித்து நகராட்சி உரக் கிடங்கில் கொண்டு சென்று சோ்க்க வேண்டும். ஆனால், 39 டன்னுக்கும் குறைவாகவே குப்பைகள் கொண்டு சென்று சோ்க்கப்படுவதாக பரவலாக புகாா் எழுந்துள்ளது.
அதனடிப்படையில் நகராட்சிகளின் நிா்வாக கூடுதல் இயக்குநா் விஜயகுமாா் ஆம்பூா் நகராட்சி உரக் கிடங்கை ஆய்வு செய்தாா். தொடா்ந்து உரக் கிடங்கிற்கு கொண்டு வரப்படும் குப்பைகளின் அளவை எடை மேடையில் அளவீடு செய்யும் பணியையும் அவா் ஆய்வு செய்தாா்.