செய்திகள் :

``உலகின் சிறந்த விஞ்ஞானிகள்'' - ஸ்டான்போர்ட் பல்கலை., பட்டியலில் ராமநாதபுரம் உதவிப் பேராசிரியர்!

post image

அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலை மற்றும் எல்ஸ்வேர் நிறுவனம் இணைந்து உலகின் சிறந்த 2% விஞ்ஞானிகளின் பட்டியலைத் தேர்வு செய்து வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட இந்த தரவரிசைப் பட்டியலில் 22 அறிவியல் துறைகள் மற்றும் 174 துணைத் துறைகளின் கீழ் உலகம் முழுவதும் உள்ள 2 லட்சத்திற்கும் அதிகமான ஆராய்ச்சியாளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

செந்தில் மணிராஜன்

இந்தியாவைச் சேர்ந்த சுமார் 3500-க்கும் அதிகமான விஞ்ஞானிகள் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இந்தப் பட்டியலில் பாம்பனைப் பூர்வீகமாகக் கொண்ட ஆராய்ச்சியாளர் செந்தில் மணிராஜன் என்பவரும் இடம் பிடித்துள்ளார்.

ராமநாதபுரத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் இயற்பியல் துறை உதவிப் பேராசிரியராக செந்தில் மணிராஜன் பணியாற்றி வருகிறார்.

அங்கு இயற்பியல் துறையின் தலைவராகவும் அவர் உள்ளார். இவர், பல்வேறு வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து புற்றுநோயினை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.

சான்றிதழ்

ரத்தம் இன்றி மனிதரின் உமிழ்நீரைப் பரிசோதனை செய்து புற்றுநோயை முன் கூட்டியே அறிந்து கொள்ள ஆப்டிகல் பைபரை பயன்படுத்தி பயோ சென்சார் பிரிவில் ஆராய்ச்சியினை தொடர்ந்து வருகிறார்.

தனது துறை தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் வெளியிட்டு வருகிறார். இதன் வழியாக உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் செந்தில் மணிராஜன் இடம் பிடித்துள்ளார்.

தொடர்ந்து நான்காவது முறையாக இந்தப் பட்டியலில் இடம்பிடித்த செந்தில் மணிராஜனை சென்னை அண்ணா பல்கலைக் கழக உயர்மட்ட நிர்வாகிகள் மற்றும் இராமநாதபுரம் பொறியியல் கல்லூரி முதல்வர் உள்ளிட்ட பேராசிரியர்கள் பாராட்டியுள்ளனர்.

மனிதனால் 150 வயதுக்கு மேல் வாழ முடியுமா? - ஆராய்ச்சியாளர்கள் சொல்வதென்ன?

மனிதர்களின் ஆயுட்காலத்தை 150 ஆண்டுகள் வரை நீட்டிப்பது குறித்து ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர், சமீபத்தில் பேசியது சர்வதேச அளவில் கவனம் பெற்றது.இந்த உரையாடலில் உயிரி தொழில்நு... மேலும் பார்க்க

தினமும் 'ஒரு பீர்' அளவிலான ஆல்கஹாலை உட்கொள்ளும் சிம்பன்சிகள் - ஆய்வில் வெளிவந்த சுவாரஸ்ய தகவல்!

காடுகளில் வாழும் சிம்பன்சிகள், நன்கு பழுத்த பழங்களை உண்பதன் மூலம் தினமும் ஒரு பீர் பாட்டில் அளவுக்கு சமமான ஆல்கஹாலை உட்கொள்வதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு ஆல்கஹால் மீதுள்ள நாட்டம் எப்ப... மேலும் பார்க்க

Sleep: அலாரம் அடிப்பதற்கு முன்பே கண் விழித்துவிடுகிறீர்களா? அதற்கு அறிவியல் காரணம் இதுதான்!

காலையில் அலாரம் அடிப்பதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பே கண் விழித்து அலாரமை ஆஃப் செய்திருப்போம். இந்த அனுபவம், நம் வாழ்வில் பலமுறை நடந்திருக்கும். இது ஏதோ தற்செயலான நிகழ்வு என்றோ, அல்லது நமக்கு ஏதோ சூ... மேலும் பார்க்க

மது அருந்துவர்களை கொசு அதிகம் கடிக்குமா? ஆய்வில் வெளியான ஆச்சரிய தகவல்கள்!

மற்றவர்களை காட்டிலும் மது அருந்துபவர்கள் கொசுக்களால் ஈர்க்கப்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நெதர்லாந்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் குழு மேற்கொண்ட ஆய்வின் முடிவில் பீர் நுகர்வோருக்கும் கொசு கடித்தல... மேலும் பார்க்க

Airplane: விமானங்கள் வெள்ளை நிறத்தில் மட்டும் இருப்பதற்கு என்ன காரணம் தெரியுமா?

பெரும்பாலும் விமானங்கள் வெள்ளை நிறத்தில் இருப்பதை பார்த்திருப்போம். எதற்காக பெரும்பாலான விமானங்கள் வெள்ளை நிறத்தில் இருக்கின்றன என்பது குறித்தும் இதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணங்களை குறித்தும... மேலும் பார்க்க

அழகான குழந்தைகளை பார்க்கும் போது கிள்ளிவைக்க தோன்றுகிறதா?- இதற்கு பின்னால் இருக்கும் காரணம் இதுதான்!

அழகான குழந்தைகளை பார்க்கும்போது அல்லது சிறிய நாய்க்குட்டி பூனைக்குட்டி என கியூட்டாக ஏதேனும் ஒரு விஷயத்தை பார்க்கும்போது அவற்றை கிள்ளவோ, இறுக்கி அணைக்கவோ, விளையாட்டாக கடிக்கவோ தோன்றும். இந்த உணர்வினை க... மேலும் பார்க்க