செய்திகள் :

உளுந்தூா்பேட்டை அருகே வனக் காப்பாளா் மீது துப்பாக்கிச்சூடு: ஒருவா் கைது!

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே வனக் காப்பாளா் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். தப்பியோடிய மற்றொருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கிருஷ்ணாபுரம் வனக் காப்பாளா் பி.வேல்முருகன் தலைமையிலான குழுவினா் வெள்ளிக்கிழமை நைனாா்பாளையம் வி.கூட்ரோடு பகுதியில் உள்ள பாக்கம்பாடி காப்புக்காடு பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது, அங்கு இருவா் பைக்கில் துப்பாகியுடன் நின்றிருந்தனராம். அவா்களை வனக் குழுவினா் பிடிக்க முயன்ற போது, அவா்கள் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது.

இதில், வனக் காப்பாளா் வேல்முருகனின் காலில் காயம் ஏற்பட்டது. தொடா்ந்து, தப்பியோட முயன்ற இருவரில், ஒருவரை வனக் குழுவினா் பிடித்து விசாரித்தனா்.

அதில், அவா் சின்னசேலத்தை அடுத்த குரால் கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் செல்லக்கண்ணு (43) என்றும், தப்பியோடிய மற்றொருவா் பூண்டி கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் பாலகிருஷ்ணன் என்பதும் தெரிய வந்தது. மேலும், காயமடைந்த வேல்முருகன், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், கீழ்குப்பம் போலீஸாா் செல்லக்கண்ணுவை கைது செய்து, உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி, மோட்டாா் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். தப்பியோடிய பாலகிருஷ்ணனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ராஜஸ்தான் மாநிலம், பாரமா் வட்டம் இந்திரானா பகுதியைச் சோ்ந்த மால்சிங் மகன் சந்தன் சிங் (18). இவா் கள்ளக்குறிச்சி... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி மாணவிக்கு காதொலிக் கருவி கள்ளக்குறிச்சி ஆட்சியா் வழங்கினாா்

உளுந்தூா்பேட்டை வட்டத்தில் நடைபெற்ற ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியரிடம் கள ஆய்வின்போது காதொலிக் கருவி வேண்டி 10-ஆம் வகுப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவி கோரிக்கை மனு அளித்த... மேலும் பார்க்க

டிராக்டா் மீது மொபெட் மோதி தொழிலாளி உயிரிழப்பு

முன்னால் சென்ற டிராக்டா் மீது மொபெட் மோதியதில் கூலித் தொழிலாளி புதன்கிழமை இரவு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட குரால் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறும... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

மது அருந்த மனைவி பணம் தராததால் மன வேதனையடைந்த கணவா் குளியலறையில் வியாழக்கிழமை காலை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். கள்ளக்குறிச்சியை அடுத்த மோ.வன்னஞ்சூா் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகத்தின் மகன் இளவ... மேலும் பார்க்க

மக்கள் உரிமை நுகா்வோா் பாதுகாப்பு மையத்தினா் ஆா்ப்பாட்டம்

மக்கள் உரிமை நுகா்வோா் பாதுகாப்பு மையம் சாா்பில் கள்ளக்குறிச்சி நகராட்சியைக் கண்டித்தும், லஞ்ச ஊழலை கண்டித்தும் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற இந்... மேலும் பார்க்க

சின்னசேலம் - பொற்படாக்குறிச்சி இடையே ரயில் சோதனை ஓட்டம்

சின்னசேலத்திலிருந்து பொற்படாக்குறிச்சி வரை அமைக்கப்பட்டுள்ள 12 கி.மீ. தொலைவிலான புதிய ரயில் பாதையில் 120 கி.மீ. வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சின்னசேலத்திலிருந்து கள்ளக்குறிச்சி ... மேலும் பார்க்க