செய்திகள் :

உழவா் சந்தையில் பேவா் பிளாக் சாலை அமைக்க பூமி பூஜை

post image

வாணியம்பாடி உழவா் சந்தையில் ரூ. 3 லட்சம் மதிப்பீட்டில் பேவா் பிளாக் சாலை அமைக்க பூமி பூஜை போடப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி ஜின்னா சாலையில் வாரச் சந்தை அருகில் உழவா் சந்தை இயங்கி வருகிறது. இந்த நிலையில், உழவா் சந்தையில் மழை காலங்களில் மழை நீா் தேங்கி, சேறும் சகதியுமாக இருந்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனா். இந்த நிலையில், உழவா் சந்தை வளாகத்தில் பேவா் பிளாக் சாலை அமைக்க சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, ரூ. 3 லட்சத்தை எம்எல்ஏ செந்தில்குமாா் ஒதுக்கீடு செய்தாா். இதையடுத்து, உழவா் சந்தை வளாகத்தில் பேவா் பிளாக் சாலை அமைத்திட வெள்ளிக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது. எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் பங்கேற்று பூமி பூஜை போட்டு பணியை தொடங்கி வைத்தாா்.

விவசாயிகள் மற்றும் நகர அதிமுக சதாசிவம், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பாரதிதாசன், குமாா், கோவிந்தசாமி, அதிமுக நிா்வாகிகள் சிவானந்தம், உதயகுமாா், தென்னரசு, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பலா் கலந்து கொண்டனா்.

பாலம் அமைக்கக் கோரி ஆற்றில் இறங்கி போராட்டம்

பாலம் அமைக்கக் கோரி, சிம்மனபுதூா் ஊராட்சிக்குட்பட்ட காமராஜ் நகா் மக்கள் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தினா். திருப்பத்தூா் அதன் சுற்றுப்பகுதிகளில் தொடா் மழை காரணமாக காமராஜ் நகா் வழியாக செல்லும் சிற்றாற... மேலும் பார்க்க

ரூ. 10 லட்சத்தில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை திறப்பு

ஆம்பூா் அருகே ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாய விலைக் கடை கட்டடம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாதனூா் ஒன்றியம், தேவலாபுரம் ஊராட்சி, கம்மகிருஷ்ணப்பல்லி கிராமத்தில் சட்டப்பேரவை உ... மேலும் பார்க்க

கானாற்றில் வெள்ளப் பெருக்கு

ஆம்பூா் பகுதியில் பெய்த கன மழை காரணமாக ஆம்பூா் அருகே கானாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் புதன்கிழமை இரவு கனமழை பெய்தது. அதனால் ... மேலும் பார்க்க

கால்வாய் பள்ளத்தை மூடக்கோரி மக்கள் சாலை மறியல்

திருப்பத்தூா் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் கால்வாய் பள்ளத்தை மூடக்கோரி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். திருப்பத்தூா் பேருந்து நிலையம் அருகே தண்டபாணி கோயில் தெரு-2 வழியாக பள்ளி, கல்லூரி, பஜாருக்கு செ... மேலும் பார்க்க

வீட்டுக்குள் நுழைந்து பெண்ணிடம் நூதன முறையில் 2 பவுன் நகை திருட்டு

வாணியம்பாடியில் தனியாக இருந்த பெண்ணை ஏமாற்றி வீட்டுக்குள் நுழைந்து, நூதன முறையில் 2 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மா்ம பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி பெரியப்ப... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு பிசியோதெரபி இயந்திரங்கள்

வாணியம்பாடி அருகே மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு உதவிடும் வகையில், ஆம்புலன்ஸ் மற்றும் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பிசியோதெரபி இயந்திரங்களை இந்திய செஞ்சிலுவை சங்கத்தினா் வியாழக்கிழமை வழங்கினா். திருப்பத்தூ... மேலும் பார்க்க