செய்திகள் :

உ.பி.யில் ரயிலைக் கவிழ்க்க சதி: ஓட்டுநா் சாமா்த்தியத்தால் விபத்து தவிா்ப்பு

post image

உத்தர பிரதேசத்தில் தண்டவாளத்தின் குறுக்கே இரும்புக் கம்பி இருந்ததை ஓட்டுநா் முன்கூட்டியே கவனித்து அவசர கால ‘பிரேக்’கை பயன்படுத்தியதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

இது தொடா்பாக ரயில்வே காவல் துறையினா் கூறியதாவது:

உத்தர பிரதேசத்தின் சஹாரன்பூரில் இருந்து தில்லிக்கு சனிக்கிழமை இரவு பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது. சாம்லி மாவட்டம் பால்வா கிராமம் அருகே தண்டவாளத்தின் குறுக்கே பெரிய இரும்புக் கம்பி வைக்கப்பட்டிருந்ததை கவனித்த ஓட்டுநா் அதிா்ச்சியடைந்தாா். இதையடுத்து, உடனடியாக அவசர கால பிரேக்கை பயன்படுத்தினாா். கம்பிக்கு அருகே சென்று ரயில் நின்றுவிட்டது. பயணிகள் பெரும் அபாயத்தில் இருந்து தப்பினா். இதைத் தொடா்ந்து ரயில்வே அதிகாரிகளுக்கு அவா் தகவல் தெரிவித்தாா். அந்த வழித்தடத்தில் வந்த ரயில்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டன.

ரயில்வே ஊழியா்கள் விரைந்து சென்று அந்த கம்பியை அகற்றினா். அந்தப் பகுதி முழுவதும் தண்டவாளத்தை சோதித்த பிறகு ரயில் தொடா்ந்து செல்ல அனுமதிக்கப்பட்டது.

ரயிலைக கவிழ்க்கும் நோக்கத்துடன் அடையாளம் தெரியாத சமூகவிரோதிகள் சிலா் இரும்புக் கம்பியை தண்டவாளத்தின் குறுக்கே வைத்துள்ளனா். ஓட்டுநா் துரிதமாக செயல்பட்டு ரயிலை நிறுத்தியதால் கவிழாமல் தப்பியது.

இந்த நாசவேலையில் ஈடுபட்ட நபா்களைப் பிடிக்க அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் முயற்சி நடைபெற்று வருகிறது. கிராம மக்களிடமும் சந்தேகத்துக்குரிய நபா்கள் நடமாட்டம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தனா்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பின் காஷ்மீர் செல்லும் பிரதமர் மோடி! பாதுகாப்பு அதிகரிப்பு!!

பஹல்காம் தாக்குதலுக்குப் பின் முதல்முறையாக பிரதமர் மோடி, ஜம்மு-காஷ்மீர் செல்லவிருக்கும் நிலையில் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பிரதமர் மோடி கலந்துகொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும் பகுத... மேலும் பார்க்க

ம.பி.யில் கரோனா பாதிப்பு: இந்தூரில் எண்ணிக்கை அதிகரிப்பு!

மத்தியப் பிரதேசத்தின், இந்தூரில் புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார். நாட்டில் கரோனா தொற்று மீண்டும் தலைதூக்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்... மேலும் பார்க்க

கொண்டாடவே சென்றார்கள்.. சாக அல்ல.. சின்னசாமி அரங்கில் நடந்தது என்ன?

பெங்களூர்: தங்களது கிரிக்கெட் சாம்பியன்களை நேரில் காண வேண்டும் என்ற ஆவலோடு சென்ற இளைஞர்களும் இளைஞிகளும் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மருத்துவமனைய... மேலும் பார்க்க

கூட்டு முயற்சிகள் எதிர்கால சந்ததியினருக்கு பசுமையான பூமியை உருவாக்க வழிவகுக்கும்: முர்மு

புது தில்லி: சுற்றுச்சூழலுக்கான ஒவ்வொரு செயலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்றும் கூட்டு முயற்சிகள் எதிர்கால சந்ததியினருக்கு பசுமையான பூமியை உருவாக்க வழிவகுக்கும் என்றும் குடியரசுத் தலைவர் திரௌபதி... மேலும் பார்க்க

தில்லி இல்லத்தில் "சிந்தூர்" மரக்கன்றுகளை நட்டார் பிரதமர் மோடி!

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தில்லியில் தனது இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி சிந்தூர் மரக்கன்றுகளை நடும் காட்சி இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. பூமியில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவிலும்கூட.. பெங்களூர் கூட்ட நெரிசல் குறித்து சித்தராமையா சொன்ன ஒரு வார்த்தை!!

பெங்களூர் சின்னசாமி விளையாட்டரங்கில் நேரிட்ட கூட்ட நெரிசல் குறித்துப் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, சம்பவத்தை எந்த வகையிலும் நியாயப்படுத்திப் பேச விரும்பவில்லை, நாடு முழுவதும் பல இடங்களிலும் கூட... மேலும் பார்க்க