செய்திகள் :

ஊட்டி: 3வது நாளாக இரவில் கொட்டி தீர்க்கும் மழை - முடங்கும் போக்குவரத்து, மலை ரயில் சேவையும் ரத்து!

post image

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்திலும் கடந்த மூன்று நாள்களாக மழை தீவிரமடைந்து வருகிறது. குன்னூர், கோத்தகிரி, குந்தா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் மின்னல், இடியுடன் கனமழை பெய்து வருகிறது.

சீரமைப்பு பணிகள்

கனமழையின் காரணமாக குன்னூர் நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சில குடியிருப்புகள், சாலைகளில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. தீயணைப்பு வீரர்கள், வருவாய்த்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மூன்றாவது நாளாக நேற்றிரவும் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. இன்று காலை நிலவரப்படி நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக கோத்தகிரியில் 137 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அத்துப்படியாக 103 மீல்லிமீட்டரும் பர்லியாறில் 92 மில்லிமீட்டரும்‌ பதிவாகியுள்ளது. கெத்தை மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் மேட்டுப்பாளையம் - மஞ்சூர் இடையே போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சீரமைப்பு பணிகள்

அதேபோல் குன்னூர் - கோத்தகிரி சாலையில் மரங்கள் விழுந்துள்ளதால் அங்கும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மரங்களை அகற்றும் பணியில் மீட்பு குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே மலை ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் தற்காலிகமாக மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Rain Update: எந்தெந்த மாவட்டங்களில் 24-ம் தேதி வரை மழை; முழு விவரம்

தற்போது இந்திய வானிலை மையத்தின் அறிக்கைப்படி, 'தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது'. இதனால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வருகிற 24-ம் தேதி வரையில் இடியுடன் க... மேலும் பார்க்க

Rain Updates: 24 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை; சென்னை நிலவரம் என்ன? - வானிலை மையம் தகவல்

கடந்த சில நாள்களாகவே, தமிழ்நாடு, புதுச்சேரியில் சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்துகொண்டிருக்கிறது. இன்று காலை 10 மணி வரை... சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கைப்படி, இந்த வாரம் முழுவதும் தமிழ்நா... மேலும் பார்க்க

Rain Alert: ``இன்றும் நாளையும் மழை பெய்யும் மாவட்டங்கள்'' - சென்னை வானிலை மையம் தகவல்

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. நேற்றைய முன்தினம் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பக... மேலும் பார்க்க

தேனி: வரலாறு காணாத கனமழை... வெள்ளக்காடான பகுதிகள்! | Photo Album

வரலாறு காணாத கனமழைவரலாறு காணாத கனமழைவரலாறு காணாத கனமழைவரலாறு காணாத கனமழைவரலாறு காணாத கனமழைவரலாறு காணாத கனமழைவரலாறு காணாத கனமழைவரலாறு காணாத கனமழைவரலாறு காணாத கனமழைவரலாறு காணாத கனமழைவரலாறு காணாத கனமழைவர... மேலும் பார்க்க

Rain Alert 2025: `கிடுகிடு வென உயரும் வைகை அணை' நீர்வரத்து விநாடிக்கு 13,000 கனஅடியாக அதிகரிப்பு

வெள்ளப்பெருக்கு வெள்ளப்பெருக்கு வெள்ளப்பெருக்கு வெள்ளப்பெருக்கு வெள்ளப்பெருக்கு வெள்ளப்பெருக்கு வெள்ளப்பெருக்கு வெள்ளப்பெருக்கு வெள்ளப்பெருக்கு வெள்ளப்பெருக்கு மேலும் பார்க்க

நீலகிரி: இரவில் கொட்டித் தீர்க்கும் கனமழை, தத்தளிக்கும் மக்கள்! | Photo Album

நீலகிரி மழை பாதிப்புகள்நீலகிரி மழை பாதிப்புகள்நீலகிரி மழை பாதிப்புகள்நீலகிரி மழை பாதிப்புகள்நீலகிரி மழை பாதிப்புகள்நீலகிரி மழை பாதிப்புகள்நீலகிரி மழை பாதிப்புகள்நீலகிரி மழை பாதிப்புகள்நீலகிரி மழை பாதி... மேலும் பார்க்க