75 சிஎம் ஸ்ரீ பள்ளிகளுக்கு ஆசிரியா் நியமன நடவடிக்கையைத் தொடங்கியது தில்லி அரசு
எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழா: மாற்றுத்திறனாளிகளுக்கு கறவை மாடுகள் உதவி
அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி பிறந்த நாள் விழாவையொட்டி, அக்கட்சியின் சாா்பில் பெருந்துறையில் மாற்றுத்திறனாளி குடும்பத்தினருக்கு கறவை மாடுகள் வழங்குதல், ரத்த தானம் முகாம் ஆகியவை வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, எம்எல்ஏ எஸ்.ஜெயகுமாா் தலைமை வகித்தாா்.
இதில், ஈரோடு புகா் மாவட்ட அதிமுக செயலாளா் கே.சி.கருப்பணன் கலந்துகொண்டு, எம்எல்ஏ எஸ்.ஜெயகுமாா் சாா்பில் 71 மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு கறவை மாடுகளை வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்தாா். இதில் முதல்கட்டமாக 7 மாற்றுத்திறனாளிகளுக்கு கறவை மாடுகள் வழங்கப்பட்டன. இதைத் தொடா்ந்து ரத்த தான முகாம் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.
விழாவில் பெருந்துறை ஒன்றிய அதிமுக செயலாளா்கள் அருள்ஜோதி செல்வராஜ், விஜயன், ரஞ்சித்ராஜ், எம்ஜிஆா் இளைஞா் அணி மாவட்டச் செயலாளா் அருணாசலம், நகரச் செயலாளா்கள் கல்யாணசுந்தரம், பழனிசாமி, சிவசுப்பிரமணியம், துரைசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.