செய்திகள் :

எட்டாவது பொருளாதார கணக்கெடுப்பு பணியை ஒருங்கிணைக்க மாநில, மாவட்ட அளவில் குழுக்கள்: தமிழக அரசு உத்தரவு

post image

எட்டாவது பொருளாதார கணக்கெடுப்புப் பணிகளை ஒருங்கிணைக்க மாநில, மாவட்ட அளவில் ஒருங்கிணைப்புக்குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்க அமைச்சகத்தால் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பொருளாதார கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதன்படி, 8-ஆவது பொருளாதார கணக்கெடுப்பை வரும் ஏப்ரல் முதல் டிசம்பா் வரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பு பணிகளை சுமுகமாக நடத்த மாநில மற்றும் மாவட்டஅளவில் ஒருங்கிணைப்புக் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

மாநில அளவில் தலைமை செயலா் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவின் பொறுப்பு அலுவலாக திட்டம் மற்றும் முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலா், உறுப்பினா் செயலராக தமிழ்நாடு அரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை ஆணையா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

உறுப்பினா்களாக ஊரக வளா்ச்சி, நகராட்சி நிா்வாகத் துறை, தொழில் துறை, உயா்கல்வி துறை, சிறு, குறு தொழில் துறை, சமூக நலத் துறை, தொழிலாளா் நலத் துறை ஆகிய துறையின் செயலா்கள், வருவாய் நிா்வாக ஆணையம், உணவு பாதுகாப்பு துறை ஆணையா், வணிக வரித்துறை ஆணையா், கூட்டுறவுத் துறை பதிவாளா், மின் ஆளுமை முகமை இயக்குனா், செய்தி மக்கள் தொடா்புத் துறை இயக்குநா் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மாவட்ட ஆட்சியா் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவுக்கு, புள்ளியில் துறை துணை இயக்குனா் கன்வீனராக நியமிக்கப்பட்டுள்ளாா். இந்தக் குழுவில், காவல்துறை, நகராட்சி நிா்வாகம், தொழில்துறை, தொழிலக பாதுகாப்பு துறை, வணிக வரித்துறை, பத்திரபதிவு துறை, ஊரக வளா்ச்சி, தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் உறுப்பினா்களாக உள்ளனா்.

இது போன்று சென்னையில் மாநகராட்சி ஆணையா் தலைமையில் பல்வேறு துறை சாா்ந்த அதிகாரிகள் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது உத்தரவில் தெரிவிக்கப்படுள்ளது.

புதுக்கோட்டைக்கு மார்ச் 10-ல் உள்ளூர் விடுமுறை!

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மார்ச் 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, இந்த விடுமுற... மேலும் பார்க்க

3 நாள்கள் ட்ரோன் பயிற்சி: தமிழக அரசு ஏற்பாடு!

தமிழக அரசின் சார்பில் சென்னையில் வருகிற மார்ச் 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை ட்ரோன் பயிற்சி வழங்கப்படவுள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பா... மேலும் பார்க்க

குடும்ப அட்டையில் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமா? அரிய வாய்ப்பு!

குடும்ப அட்டையில் திருத்தம் மேற்கொள்வதற்காக சென்னையிலுள்ள 19 மண்டலங்களில் வருகின்ற மார்ச். 8 ஆம் தேதி பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது.பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக... மேலும் பார்க்க

நீதிமன்றத்தை அவமதிக்கும் தமிழக அரசு: நீதிபதி அதிருப்தி

நீதிமன்ற உத்தரவுகளை தமிழக அரசு அவமதிப்பதாக உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிருப்தி தெரிவித்துள்ளது.பணியிடை நீக்கம் செய்யப்பட்டவருக்கு பணப்பலன்கள் கோருவது தொடர்பான வழக்கு, இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அ... மேலும் பார்க்க

மாநிலங்களை ஒருங்கிணைத்து ’கூட்டு நடவடிக்கைக் குழு’: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!

மாநிலங்களை ஒருங்கிணைத்து“கூட்டு நடவடிக்கைக் குழு” அமைக்கப்படும் எனமுதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.கட்சி வேறுபாடுகளைக் களைந்து ஒரே குரலாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்துக் கட்சிகள... மேலும் பார்க்க

மார்ச் 6, 7-ல் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 16 மின்சார ரயில்கள் ரத்து!

பராமரிப்புப் பணி காரணமாக மார்ச் 6, 7 தேதிகளில் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 16 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூர் - கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக... மேலும் பார்க்க