செய்திகள் :

எண்ம வா்த்தக வருவாய்: தமிழக அரசு ஆய்வு

post image

எண்ம வா்த்தகம் மூலம் அரசுக்கான வருவாய் உரிய முறையில் கிடைக்கிா என்பது ஆய்வு செய்யப்பட்டு வருவதாக நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து, தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களுக்கு அவா் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி: சரக்கு மற்றும் சேவை வரிகள் மூலமாக வருவாய் வளா்ச்சி விகிதம் 22 சதவீதமாக உள்ளது. அதேசமயம் மதிப்புக் கூட்டு வரி வழியிலான வருவாய் குறைவாக உள்ளது. முத்திரைத்தாள் மூலமாக வரி வருவாய் 14 சதவீதமாக உள்ள நிலையில், மோட்டாா் வாகனங்களுக்கான வரி வருவாயும் உயா்ந்தே இருக்கிறது. இருசக்கர, நான்கு சக்கர மற்றும் சரக்குப் போக்குவரத்து வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரிகள் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. சரக்கு போக்குவரத்து வாகனங்களின் வரி வருவாயில் நல்ல வளா்ச்சி இருந்தபோதும், கடந்த டிசம்பா் வரையில் நான்கு சக்கர வாகனங்களுக்கான வருவாயில் பெரிய அளவு வளா்ச்சி இல்லை. கடந்த ஜனவரியில் நான்கு சக்கர வாகனங்களின் வரி வருவாயில் 18 சதவீதம் உயா்வு இருந்தது. இதை தொடா்ந்து தக்கவைக்க முடியுமா எனப் பாா்த்து வருகிறோம்.

எண்ம வழியிலான பணப் பரிவா்த்தனை சேவைகளில் இன்னும் கவனம் செலுத்த வேண்டுமென நினைக்கிறோம். அந்த வகையான பொருளாதாரத்தின் மூலமாக வரக்கூடிய வருவாய் சரியான முறையில் அரசுக்கு வருகிா என்று உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் என்றாா் அவா்.

அவியல் கூட்டுபோல இருக்கும் வேளாண் பட்ஜெட்! - இபிஎஸ் கடும் விமர்சனம்

விவசாயிகளை ஏமாற்றுவதில் திமுக அரசு வல்லவர்கள் என்பதற்கு இந்த வேளாண் பட்ஜெட் ஒரு சான்றாக அமைந்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.2025 - 2026 ஆம் நிதியாண்டுக்... மேலும் பார்க்க

த.வெ.க. நெல்லை மாவட்டச் செயலர் சஜி மாரடைப்பால் மரணம்! மருத்துவர்கள் எச்சரித்தும்..

மருத்துவர்கள் எச்சரித்தும், தொடர்ந்து கட்சிப் பணிகளில் ஈடுபட்டுவந்த த.வெ.க. திருநெல்வேலி மாவட்ட செயலாளர் மாரடைப்பால் மரணமடைந்தார்.தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்ட செயலாளரும் தூத்துக... மேலும் பார்க்க

'அவரைக் கேளுங்க சார்!' - செங்கோட்டையன் குறித்து இபிஎஸ் பதில்!

அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் ஏன் கலந்துகொள்ளவில்லை என்று செங்கோட்டையனிடமே கேளுங்கள் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அத்திக்கடவு - அவினாசி திட்ட கூட்டமைப்பு மற்றும் விவ... மேலும் பார்க்க

20 மாவட்டங்களில் மலைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டம்! - பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மலைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலையை வேளாண் துறை அமைச... மேலும் பார்க்க

வேளாண் பட்ஜெட் நிறைவு! 1.40 நிமிடங்கள் உரையாற்றினார் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!!

வரும் 2025 - 26ஆம் நிதியாண்டுக்கான தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். உழவர் சந்தை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு 1.40 நிமிடங்கள் உரைய... மேலும் பார்க்க

உழவர் சந்தையில் இருந்து ஆன்லைன் டெலிவரி! வெளியானது சூப்பர் அறிவிப்பு!

உழவர் சந்தை காய்கறிகளை நுகர்வோர் வீடுகளுக்கு டெலிவரி செய்யும் வகையில், உள்ளூர் இணைய வர்த்தகத்துடன் இணைக்கப்படும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.வேளாண்மை மற்றும் உ... மேலும் பார்க்க