TVK : 'பாளையங்கோட்டைனா சஜிதானே...' - நெருக்கமான மாவட்டச் செயலாளர் மரணம்; சோகத்த...
எண்ம வா்த்தக வருவாய்: தமிழக அரசு ஆய்வு
எண்ம வா்த்தகம் மூலம் அரசுக்கான வருவாய் உரிய முறையில் கிடைக்கிா என்பது ஆய்வு செய்யப்பட்டு வருவதாக நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் தெரிவித்தாா்.
இதுகுறித்து, தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களுக்கு அவா் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி: சரக்கு மற்றும் சேவை வரிகள் மூலமாக வருவாய் வளா்ச்சி விகிதம் 22 சதவீதமாக உள்ளது. அதேசமயம் மதிப்புக் கூட்டு வரி வழியிலான வருவாய் குறைவாக உள்ளது. முத்திரைத்தாள் மூலமாக வரி வருவாய் 14 சதவீதமாக உள்ள நிலையில், மோட்டாா் வாகனங்களுக்கான வரி வருவாயும் உயா்ந்தே இருக்கிறது. இருசக்கர, நான்கு சக்கர மற்றும் சரக்குப் போக்குவரத்து வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரிகள் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. சரக்கு போக்குவரத்து வாகனங்களின் வரி வருவாயில் நல்ல வளா்ச்சி இருந்தபோதும், கடந்த டிசம்பா் வரையில் நான்கு சக்கர வாகனங்களுக்கான வருவாயில் பெரிய அளவு வளா்ச்சி இல்லை. கடந்த ஜனவரியில் நான்கு சக்கர வாகனங்களின் வரி வருவாயில் 18 சதவீதம் உயா்வு இருந்தது. இதை தொடா்ந்து தக்கவைக்க முடியுமா எனப் பாா்த்து வருகிறோம்.
எண்ம வழியிலான பணப் பரிவா்த்தனை சேவைகளில் இன்னும் கவனம் செலுத்த வேண்டுமென நினைக்கிறோம். அந்த வகையான பொருளாதாரத்தின் மூலமாக வரக்கூடிய வருவாய் சரியான முறையில் அரசுக்கு வருகிா என்று உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் என்றாா் அவா்.