செய்திகள் :

Vijay: ``ஜனநாயகன்ல நடிக்கிறேன்; விஜய் சார் ரகசியமாக பண்ற வேலை அது'' - பாபா பாஸ்கர்

post image

உற்சாகத்துக்குப் பஞ்சமில்லாதவர் நடன இயக்குநர் பாபா பாஸ்கர். நடன நிகழ்ச்சிகளின் நடுவர், திரைப்படங்களுக்கு நடன அமைப்பு, நடிப்பு என பரபரப்பாக இருப்பவர். சந்திக்கச் சென்றால், துறு துறு உடல்மொழியுடன் பம்பரமாய் சுற்றிக்கொண்டே அனைவரிடமும் சிரித்த முகத்தோடு பேசிக்கொண்டிருந்தார். அங்கேயே அவரிடம் ஒரு குட்டி சாட் போட்டோம்.

பாபா பாஸ்கர்

`நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்', `இட்லி கடை'னு இயக்குநர் தனுஷ்கூட பரபரப்பாக இணைந்து வேலை பார்த்துட்டு இருக்கீங்களே....

`நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' திரைப்படம் ஓர் அற்புதமான பயணம்னுதான் சொல்லணும். நமக்கு வழிகாட்டியாக இருந்த தனுஷுடைய கற்பனைல உருவான திரைப்படம் அது. அந்தப் படத்துல ரொம்பவே ஈடுபாட்டோட இணை இயக்குநர் மாதிரியே நான் வேலைகளை கவனிச்சேன். அதே மாதிரி `இட்லி கடை' படத்துல நான் ஒரு உதவி இயக்குநர்தான். என்னை உருவாக்கினவருக்கு என்னால முடிஞ்ச சின்ன உதவியாக நான் அதை பண்ணினேன்.

`இட்லி கடை' திரைப்படத்தில் என்னென்ன விஷயங்களை எதிர்பார்க்கலாம்?

நீங்க பாருங்க ப்ரோ! `இட்லி கடை' படம் நிச்சயமாக சூப்பரா இருக்கும். அந்தப் படம் பயங்கரமான எமோஷன் சார்ந்தது. உழைக்கிற மக்களுக்கு டீ கடை ஒரு எமோஷன். அதுபோல இட்லிக்குன்னு ஒரு மதிப்பு இருக்குல. அந்த எமோஷன் இந்த திரைப்படத்துல நிச்சயமாக தெரியும்.

பாபா பாஸ்கர்

`ஜனநாயகன்' திரைப்படத்துல நீங்க ஒரு முக்கியமான அங்கமாக இருக்கீங்கன்னு கேள்விபட்டோமே...

முக்கியமான பகுதி கிடையாது. ஆனால், படத்துல ஒரு பகுதியாக இருக்கேன். தளபதிகூட தோளோட ஒரு பக்கம் நின்றால் போதும் நமக்கு. தளபதி விஜய் உண்மையாகவே சிறந்த மனிதர். பக்கத்துல இருக்கிற எல்லோரையும் வளர்த்துவிடுகிற எண்ணம் தளபதி விஜய் சாருக்கு இருக்கு. விஜய் சார் சீக்ரெட்டாக நிறைய பேரை வளர்த்துவிட்டுட்டு இருக்கார். திறமைகள் கொண்ட இளம் தலைமுறையினரை தட்டிக்கொடுக்க தளபதியைப்போல வேற யாரும் இல்ல. இந்த வரிசையில நடிகர் சிம்புவும் வருவாரு. இப்போ நாங்க படத்துல நடிக்கும்போது விஜய் சார் எங்களுக்கு நல்ல இடம் கொடுக்கிறாரு. `நான் வேணா மாஸ்டர் தோள்ல கையை வச்சிட்டு நிக்கவா'னு கேட்பாரு. இன்னமும்கூட எங்களையெல்லாம் வளர்த்துவிடுகிறாரே!

பாபா பாஸ்கர்

இன்னைக்கு இங்க உங்களை கவனிக்கும்போது ஒரு விஷயம் தெரியவந்தது. அனைத்து நடன கலைஞர்களுக்கும் சமமாக அன்பைக் கொடுக்கிறீங்க! வாஞ்சையோடு எல்லோரையும் அரவணைச்சு பேசுறீங்க ! எங்க இருந்து இந்த குணம் வந்தது ?

(மென்மையாக சிரித்துக் கொண்டே...) மனிதர்கள்தான் மிகப்பெரிய பொக்கிஷம். ஒவ்வொரு சூழல்ல ஒவ்வொரு மனிதன் நமக்கு கெட்டவனாக தெரிவாங்க. ஆனால், அவங்க எல்லோருமே நல்லவங்கதான்! ஒரு சூழல்தான் ஒருவனை தீமையின் பக்கம் கொண்டு போகுது.மனிதர்கள் அனைவருமே போற்றப்பட வேண்டியவர்கள்தான். உழைக்கும் வர்கமாகிய அவர்களை நாம குறைவில்லாமல் பார்த்துக்கணும். அப்படி பண்ணினால் வேலை சிறப்பாகவும் சந்தோஷமாகவும் நடக்கும்.

'புதிதாக வருபவர்களுடன் போட்டிபோடும் இடத்தில் இருக்கிறார் வெற்றிமாறன்..!' - நெகிழ்ந்த லிங்குசாமி

ஆனந்த விகடன் யூடியூப் சேனலில் ஒளிபரப்பாகும் 'கதைப்போமா வித் பர்வீன் சுல்தானா' நிகழ்ச்சிக்கு இயக்குநர் லிங்குசாமி பேட்டிக் கொடுத்திருக்கிறார். அந்தப் பேட்டியில் சினிமா குறித்து பல விஷயங்களைப் பகிர்ந்தி... மேலும் பார்க்க

Kayadu Lohar: கயாடு லோஹர் நடித்திருக்கும் இந்தத் திரைப்படங்களைப் பார்த்திருக்கிறீர்களா?

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ’டிராகன்’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்தப் படத்தில் பல்லவி கதாபாத்திரத்தில் நடித்த கயாடு லோஹர் சமூக வலைதளங்களில் சென்சேஷன் ஆகியிர... மேலும் பார்க்க

What to watch on OTT: Be Happy, Gladiator 2, Ponman - இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

Be Happy (இந்தி) - Amazon Prime VideoBe happyரெமோ டி'சோசா இயக்கத்தில் அபிஷேக் பச்சன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Be Happy'. தந்தை - மகளுக்கான அன்பான உறவைப் பேசும் இத்திரைப்படம் 'Amazon Prime Vi... மேலும் பார்க்க

Ashwath Marimuthu: `நினைவில் கொள்ள வேண்டிய தருணம் இது' - அஸ்வத் மாரிமுத்துவின் நெகிழ்ச்சிப் பதிவு

கடந்த மாதம் வெளியான `டிராகன்' திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு 100 கோடி வசூலையும் அள்ளியது. இயக்குநராக சினிமாவில் அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் `லவ் டுடே', `டிராகன்' என இரண்டு திரைப்படங்களிலும் நட... மேலும் பார்க்க

Perusu: ``எங்க அண்ணன் வெங்கட் பிரபுவே `டேய்'னு கேட்டாரு!'' - நடிகர் வைபவ்

கார்த்திக் சுப்புராஜின் `ஸ்டோன் பென்ச்' நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வெளியாகியிருக்கிறது `பெருசு' திரைப்படம். வைபவ், நிகாரிகா, சுனில், தீபா, சாந்தினி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கிற இத்திரைப்பட... மேலும் பார்க்க