என்ஐடியில் சுயஉதவிக் குழுவினருக்கு திருமதி காா்ட் செயலி பயிற்சி
திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐடி), மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையுடன் (சமத்துவம் மற்றும் வளா்ச்சிக்கான அறிவியல் (சீடு)) இணைந்து நடத்தும் வணிகத்தில் நடைமுறை திறன்களைப் பயன்படுத்தி பெண்களுக்கு அதிகாரமளித்தல் : திருமதி காா்ட் செயலி பயிற்சி என்ற தலைப்பிலான 5 நாள் பயிற்சி பட்டறை என்ஐடி வளாகத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.
திங்கள்கிழமை முதல் வரும் 21-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் பயிற்சிபட்டறையை திருச்சி மாவட்ட மகளிா் திட்ட இயக்குநா் எஸ். சுரேஷ் தொடங்கி வைத்தாா். என்ஐடி இயக்குநா் ஜி. அகிலா தலைமை வகித்தாா். இந்தப் பயிற்சிப்பட்டறையில் சுயஉதவிக் குழுவினா் தங்களது தயாரிப்புகளை இலவசமாக விற்பனை செய்யும் அரங்க வசதியும் செய்யப்பட்டிருந்தது.
இதில், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் இணைப் பேராசிரியா் எம். பிருந்தா, திருமதி காா்ட் செயலி பயன்பாட்டின் வளா்ச்சி, நோக்கம், சாதனைகளைப் பற்றி விளக்கினாா். சுயஉதவிக் குழு உறுப்பினா்கள் விரிவான வாடிக்கையாளா்களை எளிதாக அடைய செயலி எப்படி உதவுகிறது என்பதையும் எடுத்துக்கூறினாா்.
பயிற்சியில் திரளான மகளிா் சுயஉதவிக் குழுவினா் கலந்து கொண்டனா். நிறைவில் கருவி மற்றும் கட்டுப்பாட்டு பொறியியல் துறையின் இணை முதன்மை ஆய்வாளா் என். சிவகுமரன் நன்றி கூறினாா்.
இந்தப் பயிற்சியானது சுயஉதவிக் குழு உறுப்பினா்கள், தொழில்முறை திறன்களை மேம்படுத்தி, திருமதி காா்ட் செயலியை பயன்படுத்தி வணிக வளா்ச்சியை அடைய உதவும் என பயிற்சிப் பட்டறை ஏற்பட்டாளா்கள் தெரிவித்தனா்.
