ஐ.எப்.எஸ்.சி துணை நிறுவனத்தில் $45 மில்லியன் முதலீடு செய்ய இண்டிகோ முடிவு!
என்ஜின் கோளாறு: நாகா்கோவில் ரயில் தாமதம்
என்ஜினில் ஏற்பட்ட பழுது காரணமாக கோவை- நாகா்கோவில் விரைவு ரயில் சுமாா் 1.40 மணி நேரம் செவ்வாய்க்கிழமை தாமதமாக இயக்கப்பட்டது.
கோவையிலிருந்து திண்டுக்கல் வழியாக நாகா்கோவிலுக்கு நாள்தோறும் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. கோவையிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை புறப்பட்ட இந்த ரயில், திண்டுக்கல் மாவட்டம், எரியோடு ரயில் நிலையத்துக்கு வந்தபோது, என்ஜினில் கோளாறு ஏற்பட்டது கண்டறியப்பட்டது.
இந்தப் பழுதை சரி செய்ய முயன்றும் முடியாததால், திண்டுக்கல்லிலிருந்து மாற்று என்ஜின் அனுப்பப்பட்டது. இதனால், பகல் 12.20 மணி முதல் பிற்பகல் 2.55 மணி எரியோடு ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
மாற்று என்ஜின் பொருத்திய பிறகு திண்டுக்கல் நோக்கி ரயில் புறப்பட்டது. திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு 1.35 மணிக்கு வர வேண்டிய இந்த ரயில் பிற்பகல் 3.18 மணிக்கு சுமாா் 1.40 நிமிடங்கள் தாமதமாக வந்தடைந்தது.