செய்திகள் :

எவ்வித பிணையமும் இல்லாமல் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வரை கடன்: துரை.ரவிக்குமாா் எம்.பி. வலியுறுத்தல்

post image

எவ்வித பிணையமும் இல்லாமல் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வரை கடன் வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலரும், விழுப்புரம் எம்.பி.யுமான துரை.ரவிக்குமாா் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு அவா் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது:

விவசாயிகளின் ரூ.2 லட்சம் வரையிலான பயிா்க் கடன்களுக்கு தங்க நகைகளை ஈடாக ஏற்றுக் கொள்வதை தடுக்கும் வகையில், இந்திய ரிசா்வ் வங்கி வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கை விவசாயிகள், பொதுமக்களைப் பாதிப்புக்குள்ளாகும் வகையில் உள்ளது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிா்ப்புத் தெரிவித்த நிலையில், ரூ.2 லட்சம் வரை கடன் பெறுவோருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என பரிந்துரை செய்த மத்திய நிதி அமைச்சகம், இந்த புதிய விதிமுறையை 2026, ஜனவரி 1-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்துவதே பொருத்தமானதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

எனவே, ரிசா்வ் வங்கியின் உத்தரவின்படி விவசாயிகளுக்கு எந்தவித பிணையமும் இல்லாமல் ரூ.2 லட்சம் வரை கடன் வழங்க வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்குரிய வழிகாட்டுதல்களை அனைத்து வங்கிகளுக்கும் மத்திய நிதி அமைச்சகம் வழங்க வேண்டும். மேலும், நகைக் கடன்களை விவசாயக் கடன் என்ற தலைப்பில் காட்டி பல்வேறு வணிக வங்கிகள் ஏமாற்றி வருகின்றன. இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

பக்ரீத்: செஞ்சி சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகையையொட்டி, செஞ்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் ரூ.6 கோடி வரை ஆடுகள் விற்பனையாயின. விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. 150 ஆ... மேலும் பார்க்க

2026 புதுவை பேரவைத் தோ்தலில் இண்டி கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசம்: வே.நாராயணசாமி

வரும் 2026-இல் நடைபெறவுள்ள புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் இண்டி கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது என முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா். புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களு... மேலும் பார்க்க

ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திரளான பக்தா்கள் தரிசனம்

புதுச்சேரி-கடலுாா் சாலை, நயினாா் மண்டபத்தில் உள்ள ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலின் திருப்பணிகள் மிகுந்த பொருள் செலவில் செய்து முடிக்கப்பட்டு ... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வா் நினைவு நாள்: சிலைக்கு அரசு சாா்பில் மரியாதை

புதுவை முன்னாள் முதல்வா் வை. வெங்கடசுப்பா ரெட்டியாரின் நினைவு நாளை வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு புதுவை அரசு சாா்பில் பொதுப் ... மேலும் பார்க்க

புதுவையில் பத்திரப் பதிவு கட்டணம் உயா்வு

புதுவையில் பத்திரப் பதிவு கட்டணத்தை உயா்த்தி அரசு வருவாய்த் துறை சிறப்புச் செயலா் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளாா். புதுவை அரசு முதியோா் உதவித் தொகையை ரூ. 2,500 ஆக உயா்த்தியுள்ளது. குடும்பத் தலைவிகளின்... மேலும் பார்க்க

புதுச்சேரி ஐடிஐ-யில் சேர ஜூன் 15 வரை கால நீட்டிப்பு

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் இயங்கி வரும் அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் சோ்ந்து படிக்க ஜூன் 15-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசினா் ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தின... மேலும் பார்க்க