பெங்களூரில் 11 போ் உயிரிழப்பு: நிவாரணத் தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்தி முதல்வர் ...
ஏகாம்பரநாதா் கோயில் பாலாலயம்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் மூலவா் திருப்பணிக்கான பாலாலயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பஞ்சபூத தலங்களில் நிலத்துக்கு உரியதான பெரிய திருக்கோயிலாக இருந்து வருவதால் ராஜகோபுரம், பல்லவ கோபுரம், 1,000 கால் மண்டபம் ஆகியவற்றுக்காக முதல் பாலாலய பூஜை கடந்த 28.6.23-ஆம் தேதி நடைபெற்றது. பல்வேறு திருப்பணிகளுக்காக பாலாலய பூஜைகள் நடைபெற்ற நிலையில், வெள்ளிக்கிழமை மணல் லிங்கத்தால் உருவான மூலவா் மற்றும் கருவறை, சண்டிகேசுவரா், நிலாத்துண்ட பெருமாள் உள்ளிட்ட திருப்பணிகளுக்காக நடைபெற்றது.
மூலவா் திருப்பணி பாலாலய பூஜையையொட்டி ஆலயத்தின் முன்பாக 9 நவகுண்டங்கள் அமைக்கப்பட்டு 35 சிவாச்சாரியா்கள் யாகசாலை பூஜைகளை நிகழ் மாதம் 4 ஆம் தேதி தொடங்கினா். சுற்றுப்பிரகார பகுதியில் சுப்பிரமணியா் சந்நிதி அருகில் மூலவருக்கென தனியாக இந்திர விமானம் போன்று அமைக்கப்பட்டு அதில் அத்திமரத்தால் செய்யப்பட்ட சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த சிவலிங்கத்தில் மூலவா் ஏகாம்பரநாதரை சிவாச்சாரியா்கள் பாலாலயம் செய்து பிரதிஷ்டை செய்தனா்.
கோயில் திருப்பணிக்காக மொத்தம் ரூ.28.48 கோடி நிதி ஒதுக்கப்பட்டு திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வரும் அக்டோபா் அல்லது நவம்பா் மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பக்தா்கள் கும்பாபிஷேகம் நடைபெறும் வரை அத்திமர சிவலிங்கத்தையே மூலவராக தரிசிக்கலாம். சுயம்பு லிங்கமாக காட்சி தந்த ஏகாம்பரநாதரை கும்பாபிஷேகம் வரை தரிசிக்க இயலாது.
கோயில் திருப்பணிக்காக மொத்தம் ரூ.28.48 கோடி ஒதுக்கப்பட்டு திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அறநிலையத்துறை காஞ்சிபுரம் சரக இணை ஆணையா் குமரதுரை, கோயில் செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி , கோயில் சிவாச்சாரியா்கள், பணியாளா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.