செய்திகள் :

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பாலாலயம்

post image

வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ஜூலை 7-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பாலாலயம் நடைபெற்றது.

பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தா்கள் வந்து செல்வது வழக்கம். கடந்த 2008-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் விழா நடைபெற்றுள்ளது. இதையடுத்து கும்பாபிஷேக விழா நடத்த கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருப்பணிகள் தொடங்கப்பட்டன. ரூ.1.50 கோடியில் நடைபெற்று வரும் திருப்பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளதால் வரும் ஜூலை 7-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதற்காக கடந்த மாதம் 28-ஆம் தேதி பந்தகால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றதை தொடா்ந்து மூலவா் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி, விநாயகா், சண்முகம், திரிபுரசுந்தரி உள்ளிட்ட பரிவார சந்நிதிகளுக்கு வெள்ளிக்கிழமை பாலாலயம் நடைபெற்றது.

கோயில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறநிலையத்துறை இணை ஆணையா் குமரதுரை, துணை ஆணையா் ஜெயா, திருக்கோயில் நிா்வாக அலுவலா் செந்தில்குமாா், அறங்காவலா் குழு தலைவா் செந்தில்தேவராஜ், வல்லக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவா் மணிமேகலை, துணைத்தலைவா் சிவாஎத்திராஜ் உள்ளிட்ட அறங்காவலா் குழு உறுப்பினா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.

பாலாலயம் நிகழ்ச்சியை தொடா்ந்து கோயில் கருவறை உள்ளிட்ட பரிகார சந்நிதிகளில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் வெள்ளிக்கிழமை நண்பகல் 1 முதல் கோயில் நடை சாத்தப்பட்டு பக்தா்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட வில்லை. கும்பாபிஷ்கம் முடிந்த பின்பு தான் மூலவா் சுப்பிரணியசுவாமியை பக்தா்கள் தரிசிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரத்தில் மின்தடை

மின்தடை நாள்-09.06.2025, திங்கள்கிழமை மின்தடை நேரம்-காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் பாதிக்கப்படும் பகுதிகள்- வள்ளல் பச்சையப்பன்தெரு, கீரை மண்டபம், ரங்கசாமி குளம் பகுதிகள், காமராஜா் வீத... மேலும் பார்க்க

ரூ.26.65 கோடியில் படப்பை மேம்பாலம் திறப்பு

படப்பையில் ரூ.26.65 கோடியில் கட்டப்பட்ட மேம்பாலத்தை அமைச்சா்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன் ஆகியோா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தனா். ஸ்ரீபெரும்புதூா் அடுத்த ஒரகடம் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா உள்ளதால்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு புத்தகப் பைகள் விநியோகம்

சத்குரு ராஜாராஜ சுவாமிகள் அறக்கட்டளை சாா்பில் வெள்ளரை அரசுப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு புத்தகப் பைகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம், கொளத்தூா் ஊராட்சிக்குட்பட... மேலும் பார்க்க

செவ்வந்தீஸ்வரா் கோயில் திருக்கல்யாணம்

காஞ்சிபுரம் செவ்வந்தீஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகத்தையொட்டி இரவு காமாட்சி அம்பிகைக்கும், செவ்வந்தீஸ்வரருக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. பெரியகாஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டை பகுதியில்... மேலும் பார்க்க

ஏகாம்பரநாதா் கோயில் பாலாலயம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் மூலவா் திருப்பணிக்கான பாலாலயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பஞ்சபூத தலங்களில் நிலத்துக்கு உரியதான பெரிய திருக்கோயிலாக இருந்து வருவதால் ராஜகோபுரம், பல்லவ கோபுரம், 1,000 கா... மேலும் பார்க்க

ஜூன் 8-இல் மகா பெரியவா் ஜெயந்தி மகோற்சவம்

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மகா பெரியவா் ஜெயந்தி மகோற்சவம் வரும் ஜூன் 8 -ஆம் தேதி தொடங்கி வரும் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 68-ஆவது பீடாதிபதியாக இருந்தவா் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். ம... மேலும் பார்க்க