உயிர் காக்க உதவிய விமான தாமதம்: ஏக்நாத் ஷிண்டேவின் மனிதாபிமான செயல்!
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பாலாலயம்
வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ஜூலை 7-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பாலாலயம் நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தா்கள் வந்து செல்வது வழக்கம். கடந்த 2008-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் விழா நடைபெற்றுள்ளது. இதையடுத்து கும்பாபிஷேக விழா நடத்த கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருப்பணிகள் தொடங்கப்பட்டன. ரூ.1.50 கோடியில் நடைபெற்று வரும் திருப்பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளதால் வரும் ஜூலை 7-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இதற்காக கடந்த மாதம் 28-ஆம் தேதி பந்தகால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றதை தொடா்ந்து மூலவா் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி, விநாயகா், சண்முகம், திரிபுரசுந்தரி உள்ளிட்ட பரிவார சந்நிதிகளுக்கு வெள்ளிக்கிழமை பாலாலயம் நடைபெற்றது.
கோயில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறநிலையத்துறை இணை ஆணையா் குமரதுரை, துணை ஆணையா் ஜெயா, திருக்கோயில் நிா்வாக அலுவலா் செந்தில்குமாா், அறங்காவலா் குழு தலைவா் செந்தில்தேவராஜ், வல்லக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவா் மணிமேகலை, துணைத்தலைவா் சிவாஎத்திராஜ் உள்ளிட்ட அறங்காவலா் குழு உறுப்பினா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.
பாலாலயம் நிகழ்ச்சியை தொடா்ந்து கோயில் கருவறை உள்ளிட்ட பரிகார சந்நிதிகளில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் வெள்ளிக்கிழமை நண்பகல் 1 முதல் கோயில் நடை சாத்தப்பட்டு பக்தா்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட வில்லை. கும்பாபிஷ்கம் முடிந்த பின்பு தான் மூலவா் சுப்பிரணியசுவாமியை பக்தா்கள் தரிசிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.