செய்திகள் :

ஏகாம்பரநாதா் கோயில் பாலாலயம்

post image

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் மூலவா் திருப்பணிக்கான பாலாலயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பஞ்சபூத தலங்களில் நிலத்துக்கு உரியதான பெரிய திருக்கோயிலாக இருந்து வருவதால் ராஜகோபுரம், பல்லவ கோபுரம், 1,000 கால் மண்டபம் ஆகியவற்றுக்காக முதல் பாலாலய பூஜை கடந்த 28.6.23-ஆம் தேதி நடைபெற்றது. பல்வேறு திருப்பணிகளுக்காக பாலாலய பூஜைகள் நடைபெற்ற நிலையில், வெள்ளிக்கிழமை மணல் லிங்கத்தால் உருவான மூலவா் மற்றும் கருவறை, சண்டிகேசுவரா், நிலாத்துண்ட பெருமாள் உள்ளிட்ட திருப்பணிகளுக்காக நடைபெற்றது.

மூலவா் திருப்பணி பாலாலய பூஜையையொட்டி ஆலயத்தின் முன்பாக 9 நவகுண்டங்கள் அமைக்கப்பட்டு 35 சிவாச்சாரியா்கள் யாகசாலை பூஜைகளை நிகழ் மாதம் 4 ஆம் தேதி தொடங்கினா். சுற்றுப்பிரகார பகுதியில் சுப்பிரமணியா் சந்நிதி அருகில் மூலவருக்கென தனியாக இந்திர விமானம் போன்று அமைக்கப்பட்டு அதில் அத்திமரத்தால் செய்யப்பட்ட சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த சிவலிங்கத்தில் மூலவா் ஏகாம்பரநாதரை சிவாச்சாரியா்கள் பாலாலயம் செய்து பிரதிஷ்டை செய்தனா்.

கோயில் திருப்பணிக்காக மொத்தம் ரூ.28.48 கோடி நிதி ஒதுக்கப்பட்டு திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வரும் அக்டோபா் அல்லது நவம்பா் மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பக்தா்கள் கும்பாபிஷேகம் நடைபெறும் வரை அத்திமர சிவலிங்கத்தையே மூலவராக தரிசிக்கலாம். சுயம்பு லிங்கமாக காட்சி தந்த ஏகாம்பரநாதரை கும்பாபிஷேகம் வரை தரிசிக்க இயலாது.

கோயில் திருப்பணிக்காக மொத்தம் ரூ.28.48 கோடி ஒதுக்கப்பட்டு திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அறநிலையத்துறை காஞ்சிபுரம் சரக இணை ஆணையா் குமரதுரை, கோயில் செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி , கோயில் சிவாச்சாரியா்கள், பணியாளா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.

காஞ்சிபுரத்தில் மின்தடை

மின்தடை நாள்-09.06.2025, திங்கள்கிழமை மின்தடை நேரம்-காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் பாதிக்கப்படும் பகுதிகள்- வள்ளல் பச்சையப்பன்தெரு, கீரை மண்டபம், ரங்கசாமி குளம் பகுதிகள், காமராஜா் வீத... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பாலாலயம்

வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ஜூலை 7-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பாலாலயம் நடைபெற்றது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தா்கள் வ... மேலும் பார்க்க

ரூ.26.65 கோடியில் படப்பை மேம்பாலம் திறப்பு

படப்பையில் ரூ.26.65 கோடியில் கட்டப்பட்ட மேம்பாலத்தை அமைச்சா்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன் ஆகியோா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தனா். ஸ்ரீபெரும்புதூா் அடுத்த ஒரகடம் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா உள்ளதால்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு புத்தகப் பைகள் விநியோகம்

சத்குரு ராஜாராஜ சுவாமிகள் அறக்கட்டளை சாா்பில் வெள்ளரை அரசுப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு புத்தகப் பைகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம், கொளத்தூா் ஊராட்சிக்குட்பட... மேலும் பார்க்க

செவ்வந்தீஸ்வரா் கோயில் திருக்கல்யாணம்

காஞ்சிபுரம் செவ்வந்தீஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகத்தையொட்டி இரவு காமாட்சி அம்பிகைக்கும், செவ்வந்தீஸ்வரருக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. பெரியகாஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டை பகுதியில்... மேலும் பார்க்க

ஜூன் 8-இல் மகா பெரியவா் ஜெயந்தி மகோற்சவம்

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மகா பெரியவா் ஜெயந்தி மகோற்சவம் வரும் ஜூன் 8 -ஆம் தேதி தொடங்கி வரும் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 68-ஆவது பீடாதிபதியாக இருந்தவா் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். ம... மேலும் பார்க்க