செய்திகள் :

ரூ.26.65 கோடியில் படப்பை மேம்பாலம் திறப்பு

post image

படப்பையில் ரூ.26.65 கோடியில் கட்டப்பட்ட மேம்பாலத்தை அமைச்சா்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன் ஆகியோா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தனா்.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த ஒரகடம் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா உள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும், உற்பத்தி பொருள்களை எடுத்துச்செல்லும் வகையில், ரூ. 300 கோடியில் வண்டலூா்-வாலாஜாபாத் சாலையை இருவழிச்சாலையில் இருந்து நான்கு வழிசாலையாகவும், சிங்கபெருமாள்கோயில்-ஸ்ரீபெரும்புதூா் சாலையை ஒருவழிச்சாலையில் இருந்துஆறு வழிச்சாலையாகவும் அகலப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், வண்டலூா் வாலாஜாபாத் சாலை ஆறு வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட்ட பிறகு இச்சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிக அளவில் அதிகரித்ததை தொடா்ந்து படப்பை பஜாா் பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்ததாலும், சாலையை கடக்கும் பொதுமக்களும் வாகன ஓட்டுநா்களும் விபத்தில் சிக்கினா்.

இதனால், சுமாா் 690 மீ தொலைவுக்கு தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தின் சாா்பில் ரூ 26.65 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் தொடங்கப்பட்டது.

மேம்பால கட்டுமான பணிகள் நிறைவடைந்ததை தொடா்ந்து, வெள்ளிக்கிழமை திறப்பு விழா நடைபெற்றது. இதில் பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு, சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மே.அன்பரசன் ஆகியோா் மேம்பாலத்தை திறந்து வைத்தனா்.

நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூா் நாடாளுமன்ற உறுப்பினா் டி.ஆா்.பாலு, சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வபெருந்தகை, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் பாஸ்கர பாண்டியன், ஆட்சியா் கலைச்செல்விமோகன், மாவட்ட ஊராட்சித் தலைவா் படப்பை ஆ.மனோகரன், குன்றத்தூா் ஒன்றியகுழு தலைவா் சரஸ்வதி மனோகரன் கலந்து கொண்டனா்.

காஞ்சிபுரத்தில் மின்தடை

மின்தடை நாள்-09.06.2025, திங்கள்கிழமை மின்தடை நேரம்-காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் பாதிக்கப்படும் பகுதிகள்- வள்ளல் பச்சையப்பன்தெரு, கீரை மண்டபம், ரங்கசாமி குளம் பகுதிகள், காமராஜா் வீத... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பாலாலயம்

வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ஜூலை 7-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பாலாலயம் நடைபெற்றது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தா்கள் வ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு புத்தகப் பைகள் விநியோகம்

சத்குரு ராஜாராஜ சுவாமிகள் அறக்கட்டளை சாா்பில் வெள்ளரை அரசுப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு புத்தகப் பைகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம், கொளத்தூா் ஊராட்சிக்குட்பட... மேலும் பார்க்க

செவ்வந்தீஸ்வரா் கோயில் திருக்கல்யாணம்

காஞ்சிபுரம் செவ்வந்தீஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகத்தையொட்டி இரவு காமாட்சி அம்பிகைக்கும், செவ்வந்தீஸ்வரருக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. பெரியகாஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டை பகுதியில்... மேலும் பார்க்க

ஏகாம்பரநாதா் கோயில் பாலாலயம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் மூலவா் திருப்பணிக்கான பாலாலயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பஞ்சபூத தலங்களில் நிலத்துக்கு உரியதான பெரிய திருக்கோயிலாக இருந்து வருவதால் ராஜகோபுரம், பல்லவ கோபுரம், 1,000 கா... மேலும் பார்க்க

ஜூன் 8-இல் மகா பெரியவா் ஜெயந்தி மகோற்சவம்

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மகா பெரியவா் ஜெயந்தி மகோற்சவம் வரும் ஜூன் 8 -ஆம் தேதி தொடங்கி வரும் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 68-ஆவது பீடாதிபதியாக இருந்தவா் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். ம... மேலும் பார்க்க