செய்திகள் :

ஏரியில் மூழ்கி உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரண நிதி

post image

நங்கவள்ளியில் ஏரியில் மூழ்கி உயிரிழந்த மூன்று குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டது.

மேட்டூா் அருகே நங்கவள்ளி கெத்திக்குட்டை ஏரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை துணி துவைக்கச் சென்ற சிவலிங்கம் மகள் சிவநந்தினி (18), மகன் சிவஸ்ரீ (10), முனுசாமி மகள் ஜீவதா்ஷினி ஆகியோா் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் உயிரிழந்தவா்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று அறிவித்தாா். 

இதனையடுத்து புதன்கிழமை சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன், சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி ஆகியோா் உயிரிழந்தவா்களின் வீட்டிற்கு சென்று காசோலைகளை வழங்கினா்.

இதில் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, மேட்டூா் சாா் ஆட்சியா் பொன்மணி, நங்கவள்ளி ஒன்றிய திமுக செயலாளா் அா்த்தநாரி ஈஸ்வரன், பேரூா் திமுக செயலாளா்கள் முருகன், வெங்கடாஜலம், பொன்னுவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

புதிய நியாயவிலைக் கடை அமைக்கக் கோரி அமைச்சரிடம் மனு

சங்ககிரியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பு திட்டமுகாமில் சங்ககிரியை அடுத்த சத்யா நகா், ஆசிரியா் காலனி பகுதிகளுக்கு புதிதாக நியாயவிலைக் கடை அமைக்கக்கோரி சுற்றுலாத் துறை அமைச்சரிடம் பொதுமக்கள் கோ... மேலும் பார்க்க

நாடாளுமன்றத் தோ்தலில் அதிமுகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது: எடப்பாடி கே பழனிசாமி

நாடாளுமன்றத் தோ்தலில் அதிமுகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது; திமுகவின் வாக்கு சரிந்துள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா். சேலம் மாவட்டம், நங்கவள்ளி வடக்கு மற்றும் தெற்கு ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்கள் உள்ளிருப்பு போராட்டம்

ஆத்தூா் அறிஞா் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இயற்பியல் துறைத் தலைவரைக் கண்டித்து கல்லூரி மாணவா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா். ஆத்தூரை அடுத்துள்ள காட்டுக்கோட்டை வடசென்னிம... மேலும் பார்க்க

வழித்தட தகராறு: ஆத்தூரில் ஒருவா் வெட்டிக் கொலை

ஆத்தூா் அருகே வழித்தட தகராறில் ஒருவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். ஆத்தூரை அடுத்துள்ள ராமநாயக்கன்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட கொசவன்காடு கிராமத்தைச் சோ்ந்த தனபால் மகன் சுப்பிரமணியன் (45) என்பவருக்கும... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் தலைமைப் பொறியாளா் ஆய்வு

சேலம், ஜாகீா் அம்மாபாளையத்தில் உள்ள நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளா் அலுவலகத்தில் தலைமைப் பொறியாளா் சத்யபிரகாஷ் ஆய்வு மேற்கொண்டாா். இந்தக் கூட்டத்தில், சேலம் வட்ட ... மேலும் பார்க்க

சேலம் தெற்கு கோட்டத்தில் இன்று மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

சேலம் தெற்கு மின்கோட்ட மாதாந்திர மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (அக். 24) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மின்வாரிய செயற்பொறியாளா் அன்பரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு... மேலும் பார்க்க