செய்திகள் :

ஐஎஸ்ஐ தலைமையகத்தில் பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் ஆலோசனை

post image

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் தலைமையகத்தை அந்நாட்டு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா். அப்போது பிராந்திய பாதுகாப்பு குறித்து அவரிடம் அதிகாரிகள் எடுத்துரைத்தனா்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து இருநாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், போா்ா்கால வியூகங்கள், ராணுவ நடவடிக்கைகள் குறித்து அவரிடம் அதிகாரிகள் விளக்கியதாக அந்நாடு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஷாபாஸ் ஷெரீஃபுடன் பாகிஸ்தான் துணை பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இசாக் தாா், பாதுகாப்பு அமைச்சா் க்வாஜா ஆசிஃப் மற்றும் ராணுவ தலைமை தளபதிகள் உள்ளிட்டோரும் ஐஎஸ்ஐ தலைமையகத்தை பாா்வையிட்டனா்.

அப்போது பாகிஸ்தானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் ஏதேனும் தாக்குதல் நிகழ்ந்தால் அதற்கு தக்க பதிலடி கொடுக்க தயாராக இருக்குமாறு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் அதிகாரிகளிடம் கூறியதாக பாகிஸ்தான் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

பாகிஸ்தான்: இந்திய யூடியூப் சேனல்கள் முடக்கம்

பாகிஸ்தானில் இந்திய யூடியூப் சேனல்களை அந்நாட்டு அரசு தடை செய்தது.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான்... மேலும் பார்க்க

இந்தியாவின் பதிலடி கொடுக்கப்படும்: பாகிஸ்தான் பிரதமர்

இந்தியாவின் தாக்குதலுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் ராணுவம் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும்,... மேலும் பார்க்க

முதல்முறையாக ஐரோப்பிய பயணம் மேற்கொள்ளும் சிரியாவின் இடைக்கால அதிபர்!

சிரியாவின் இடைக்கால அதிபர் முதல்முறையாக ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சிரியா நாட்டை சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுவந்த அஸாத் குடும்பத்தின் ஆட்சி உள்நாட்டுப் போரின் மூலம் கவிழ்க்கப... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்! பாகிஸ்தானில் எக்ஸ் தளத்தின் மீதான தடை நீக்கம்!

பாகிஸ்தானில் எக்ஸ் தளத்தின் மீதான தடை நீக்கப்பட்டது.பாகிஸ்தான் நாட்டின் தேசிய பாதுகாப்பு கருதி, கடந்தாண்டில் எக்ஸ் தளத்தை முடக்கம் செய்து, அந்நாட்டு அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்தியாவின்... மேலும் பார்க்க

கென்யா: 5,000 எறும்புகள் கடத்திய 2 வெளிநாட்டவருக்கு ஓராண்டு சிறை! ரூ.6.5 லட்சம் அபராதம்!

கென்யா நாட்டில் சுமார் 5,000 எறும்புகளைக் கடத்திய வெளிநாட்டவர்களுக்கு ரூ. 6.5 லட்சம் அபராதம் மற்றும் ஓராண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. கென்யாவில் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த லார்னாய் டேவிட... மேலும் பார்க்க

பூமியே அதிரும் அறிவிப்பை வெளியிடப்போகிறேன்: டிரம்ப் பேச்சால் அதிர்ந்த இணையம்!

பூமியை அதிர வைக்கும் வகையிலான ஒரு அறிவிப்பை ஒரு சில நாள்களில் வெளியிடவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். மேலும் பார்க்க