செய்திகள் :

ஐபிஎல் இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் கோப்பை யாருக்கு?

post image

ஐபிஎல் இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் மாற்றுநாள் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரின் புதிய வெற்றியாளர் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழத் தொடங்கியுள்ள நிலையில், சரிசம பலம் வாய்ந்த இரு அணிகளும் மோதுவதால், இந்தப் போட்டியில் வெல்லப் போவது யார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற பஞ்சாப் - மும்பை மோதிய குவாலிஃபையர் 2 போட்டியும் மழையால் பாதிக்கப்பட்டு போட்டி ஒரு மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது. இதனால், இன்றிரவு நடைபெறும் போட்டியும் மழையால் எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்த நிலையில், அகமதாபாத்தில் லேசான தூரல் அவ்வப்போது பெய்து வருவதாகவும், ஆனால் முழுமையாக மழை பெய்வதற்கு 5 சதவிகிதம் மட்டுமே வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மாலை வேளையில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கணித்துள்ளது.

ஒருவேளை செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த இறுதிப் போட்டி மழையால் பாதிக்கப்பட்டு முழுமையாக ரத்தானால், குவாலிஃபையர் 1, 2, எலிமினேட்டர் போல் அல்லாமல், புதன்கிழமை மாற்றுநாளில் போட்டி நடத்தப்படும்.

அதேபோன்று மாற்றுநாளிலும் மழை பெய்து போட்டி முழுமையாக ரத்தாகும் பட்சத்தில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்ததன் அடிப்படையில் பஞ்சாப் அணி கோப்பையை வென்றதாக அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4-வது முறையாக ஆர்சிபியும், 11 ஆண்டுகளுக்குப் பின்னர் பஞ்சாபும் முதல் ஐபிஎல் கோப்பைக்கான யுத்தத்தில் இறுதிப் போட்டியில் மோதுவதால், இந்தப் போட்டியில் பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இவ்விரு அணிகளும் 36 போட்டிகளில் விளையாடி இரு அணியும் தலா 18 வெற்றிகளுடன் சரிசம பலத்துடனேயே உள்ளனர்.

இதையும் படிக்க: ஆர்சிபி கோப்பை வெல்ல கோயில்களில் சிறப்பு வழிபாடு!

பெங்களூரு கூட்டநெரிசல்: ஆர்சிபி நிர்வாகி உள்பட 4 பேர் கைது!

பெங்களூரில் ஆர்சிபி அணியின் வெற்றிப் பேரணியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் பலியான விவகாரத்தில், 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.முறையான முன்னேற்பாடுகள் இல்லாமல் பேரணிக்கு அனுமதி அளித்த... மேலும் பார்க்க

அடுத்த சீசனில் 2 மடங்கு நன்றாக விளையாடுவேன்: வைபவ் சூர்யவன்ஷி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 14 வயதான வைபவ் சூர்யன்ஷி இந்த சீசனில் முதல்முறையாக விளையாடினார். 7 போட்டிகளில் 252 ரன்கள் குவித்துள்ள இவர் 206.6 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி அசத்தினார். இந்தப் போட்டிகளில் அத... மேலும் பார்க்க

கொண்டாட்டத்தை விட உயிர் முக்கியமானது: கபில் தேவ்

பெங்களூரில் நடைபெற்ற விபத்து குறித்து முன்னாள் வீரர் கபில் தேவ் கொண்டாட்டத்தை விட உயிர் முக்கியமானது எனக் கூறியுள்ளார். ஆர்சிபி அணி 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக கோப்பை வென்றது. இதன் வெற்றிக் க... மேலும் பார்க்க

பலியானோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்! - ஆர்சிபி நிர்வாகம் அறிவிப்பு

வெற்றிப் பேரணி கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படுமென ஆர்சிபி அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங... மேலும் பார்க்க

முற்றிலும் உடைந்துவிட்டேன்: விராட் கோலி!

பெங்களூரு கூட்ட நெரிசலில் ரசிகர்கள் பலியான சம்பவத்துக்கு ஆர்சிபி வீரர் விராட் கோலி வருத்தம் தெரிவித்துள்ளார்.18 ஆண்டுகளில் முதல்முறையாக ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்றதால், பெங்களுரூவில் மாநில அரசு ... மேலும் பார்க்க

ஐபிஎல் போட்டியில் சாம்பியன்: விராட் கோலிக்கு எடப்பாடி பழனிசாமி பாராட்டு

ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணி வீரா் விராட் கோலிக்கு, அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் பு... மேலும் பார்க்க