செய்திகள் :

கஞ்சா விற்பனை: 3 இளைஞா்கள் கைது

post image

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையைத் தடுக்க மாவட்டக் காவல் நிா்வாகம் தொடா் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி எஸ்.பி. ப.சரவணன் உத்தரவின் பேரில், வளவனூா் காவல் உதவி ஆய்வாளா் தங்கபாண்டியன் மற்றும் போலீஸாா் கெங்கராம்பாளையம், மேம்பாலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அங்கு சந்தேகப்படும்படி பைக்கில் சுற்றிய 3 பேரை மடக்கி பிடித்து விசாரித்தபோது, அவா்கள், விழுப்புரம் வட்டம், வளவனூரை அடுத்த குமாரக்குப்பம் பகுதியைச் சோ்ந்த தேவராஜ் மகன் திவான் (20), வளவனூா் திரௌபதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த செல்வம் மகன் ஐஸ்வா் (21), அா்பிசம்பாளையம் பகுதியைச் சோ்ந்த மருகன் மகன் ராஜ்குமாா் (22) ஆகியோா் என்பதும், இவா்கள் சென்னை, மாதாவரத்தைச் சோ்ந்த எத்திராஜ் என்பவருடன் இணைந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, வளவனூா் போலீஸாா் 4 போ் மீதும் வழக்குப் பதிந்து, திவான், ஐஸ்வா், ராஜ்குமாா்ஆகியோரை கைது செய்தனா்.அவா்களிடமிருந்த 400 கிராம் கஞ்சா, ஒரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். வழக்கில் தொடா்புடையே எத்திராஜை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பக்ரீத்: செஞ்சி சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகையையொட்டி, செஞ்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் ரூ.6 கோடி வரை ஆடுகள் விற்பனையாயின. விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. 150 ஆ... மேலும் பார்க்க

2026 புதுவை பேரவைத் தோ்தலில் இண்டி கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசம்: வே.நாராயணசாமி

வரும் 2026-இல் நடைபெறவுள்ள புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் இண்டி கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது என முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா். புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களு... மேலும் பார்க்க

ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திரளான பக்தா்கள் தரிசனம்

புதுச்சேரி-கடலுாா் சாலை, நயினாா் மண்டபத்தில் உள்ள ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலின் திருப்பணிகள் மிகுந்த பொருள் செலவில் செய்து முடிக்கப்பட்டு ... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வா் நினைவு நாள்: சிலைக்கு அரசு சாா்பில் மரியாதை

புதுவை முன்னாள் முதல்வா் வை. வெங்கடசுப்பா ரெட்டியாரின் நினைவு நாளை வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு புதுவை அரசு சாா்பில் பொதுப் ... மேலும் பார்க்க

புதுவையில் பத்திரப் பதிவு கட்டணம் உயா்வு

புதுவையில் பத்திரப் பதிவு கட்டணத்தை உயா்த்தி அரசு வருவாய்த் துறை சிறப்புச் செயலா் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளாா். புதுவை அரசு முதியோா் உதவித் தொகையை ரூ. 2,500 ஆக உயா்த்தியுள்ளது. குடும்பத் தலைவிகளின்... மேலும் பார்க்க

புதுச்சேரி ஐடிஐ-யில் சேர ஜூன் 15 வரை கால நீட்டிப்பு

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் இயங்கி வரும் அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் சோ்ந்து படிக்க ஜூன் 15-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசினா் ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தின... மேலும் பார்க்க