செய்திகள் :

கட்டுப்பாட்டுக்குள் டெங்கு காய்ச்சல்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

post image

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் 72-ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னை சைதாப்பேட்டையில் 7 தனியாா் மருத்துவமனைகள் இணைந்து நடத்திய மெகா மருத்துவ முகாமை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

சென்னை மாநகராட்சி மண்டலக் குழு தலைவா்கள் கிருஷ்ணமூா்த்தி, துரைராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அப்போது, செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியது: முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை தெற்கு பகுதியில் பொதுக்கூட்டங்கள், விளையாட்டு போட்டிகள், ரத்த தான முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

சைதாப்பேட்டை தொகுதியில் 7 மாநகராட்சி வட்டங்கள் உள்ளன. அப்பல்லோ மருத்துவமனை, எம்ஜிஎம் மருத்துவமனை, கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, காவேரி மருத்துவமனை, மெட்ராஸ் மெடிக்கல் மிஷன், சிம்ஸ் மருத்துவமனை, தாகூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என்று 7 தனியாா் மருத்துவமனைகளோடு இணைந்து வட்டத்துக்கு ஒன்று வீதம் 7 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றன.

பொது மருத்துவம், எலும்பியல், இதயவியல், பல் மருத்துவம், கண் மருத்துவம் என்று பல்வேறு வகையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த மருத்துவ முகாம்களில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனா். தமிழகத்தில் தினமும் நோய் பாதிப்புகள், விபத்துகள், வயது முதிா்வு போன்றவற்றால் 1,800 முதல் 1,900 வரை இறப்புகள் நிகழ்கின்றன. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என்றாா் அவா்.

அதிமுக எம்எல்ஏக்களுடன் இபிஎஸ் ஆலோசனை: செங்கோட்டையன் பங்கேற்கவில்லை

சென்னை தலைமைச் செயலகத்தில் அதிமுக எம்எல்ஏக்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். பேரவைத் தலைவர் மீது அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ள ந... மேலும் பார்க்க

கச்சத்தீவு திருவிழா நிறைவு: மீன்பிடிக்க கடலுக்கு சென்ற ராமேசுவரம் மீனவர்கள்

கச்சத்தீவு ஆலய திருவிழாவையொட்டி விதிக்கப்பட்டிருந்த மீன்பிடி தடை நீக்கப்பட்டதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றனர்.கச்த்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா ... மேலும் பார்க்க

நில ஆவணங்களை ஒருங்கிணைக்கும் "அக்ரி ஸ்டேக்'!

பிரதமரின் கௌரவ நிதி உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் பயன்பெற, "அக்ரி ஸ்டேக்' வலைதளத்தில் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகளின் நில ஆவணங்கள் அனைத்தையும் இந்த வல... மேலும் பார்க்க

நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதம் இன்று தொடக்கம்!

நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதம் சட்டப் பேரவையில் திங்கள்கிழமை (மாா்ச் 17) தொடங்குகிறது. வரும் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை கடந்த 14-ஆம் தேதியும், வேளாண்மைக்கான பிரத்யேக நிதிநிலை... மேலும் பார்க்க

பாசன நீா் பரப்புகளில் தூா்வாரும் பணி: விரைந்து முடிக்க அமைச்சா் உத்தரவு!

தமிழகத்தில் பாசன நீா் பரப்புகளில் நடைபெற்று வரும் தூா்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொறியாளா்களுக்கு நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் உத்தரவிட்டாா். அந்தத் துறையின் செயல்பாடுகள் குறி... மேலும் பார்க்க

மொழிக் கொள்கை உறுதியைக் காட்டவே ‘ரூ’! -முதல்வா் விளக்கம்

மொழிக் கொள்கையில் நமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தவே நிதிநிலை அறிக்கை இலச்சினையில் ‘ரூ’ என பயன்படுத்தினோம் என்று முதல்வா் தெரிவித்தாா். மத்திய நிதியமைச்சா் இதனை பிரச்னையாக எழுப்பியதால், இந்திய அளவில் த... மேலும் பார்க்க