கனிமங்களை சேமிப்பு கிடங்கில் இருந்து எடுத்துச் செல்ல விண்ணப்பிக்கலாம்!
தென்காசி மாவட்டத்தில் அனைத்து வகை கனிமங்களையும் கனிம சேமிப்பு கிடங்கிலிருந்து எடுத்து செல்ல இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்காசி மவாட்டத்தில், குவாரி மற்றும் சுரங்கங்களிலிருந்து எடுத்துச் செல்லப்படும் கனிமங்களை வரன்முறைப்படுத்துவதற்கு ஏதுவாக இணைய வழியில் வழங்கும் நடைமுறை செப்டம்பா் 2024 முதலும் மற்றும் ( ங்-டங்ழ்ம்ண்ற்) வழங்கும் நடைமுறை பிப்ரவரி 2025 முதல் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது.
தொடா்ந்து, தற்சமயம் தென்காசி மாவட்டத்தில், அனைத்து வகை கனிமங்களையும் கனிம சேமிப்பு கிடங்கிலிருந்து எடுத்து செல்வதற்கு வழங்கப்படும் மாற்று நடைச்சீட்டுகளை இணையவழி வாயிலாக வழங்கும் நடைமுறை ஜூன் 9 முதல் அமல்படுத்தபடவுள்ளது.
எனவே, கனிம குத்தகைதாரா்கள் மற்றும் கனிம சேமிப்பு கிடங்கு உரிமையாளா்கள் அனைவரும் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து மாற்று நடைச்சீட்டினை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது என்றாா் அவா்.