செய்திகள் :

கன்னட நடிகர் சுதீப்பின் தாயார் காலமானார்

post image

கன்னட நடிகர் சுதீப்பின் தாயார் சரோஜா ஞாயிற்றுக்கிழமை தனியார் மருத்துவமனையில் காலமானார்.

வயது முதிர்வு தொடர்பான நோய் காரணமாக கன்னட நடிகர் சுதீப்பின் தாயார் சரோஜா(80) தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

மணிப்பூரின் தௌபாலில் ஆயுதங்கள், வெடிபொருட்கள் மீட்பு

அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக மருத்துவமனையில் இருந்து ஜே.பி.நகர் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் மாலையில் இறுதிச் சடங்குகள் செய்யப்படும் என்று குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.

மறைந்த சரோஜாவின் உடலுக்கு திரையுலக பிரபலங்கள் பலர் நேரில் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதனிடையே சுதீப்பின் தாயார் மறைவுக்கு கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா உள்ளிட்டோர் தங்களது 'எக்ஸ்' தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்: மருத்துவர் உள்பட 6 பேர் பலி!

ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் பொதுமக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். அதில் மருத்துவர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.பயங்கரவாதத் தாக்கு... மேலும் பார்க்க

துக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற 200 பேருக்கு உடல்நலக் குறைவு

துக்க நிகழ்ச்சியில் பரிமாறப்பட்ட சிற்றுண்டியை சாப்பிட்டதால் 200 பேருக்கு ஒவ்வாமை உண்டாகி உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தின் கோலாகாட் மாவட்டத்தில் உள்ள பஸ்கோரியா கிராமத்தில் துக்க நிகழ்ச... மேலும் பார்க்க

ராஜஸ்தான் கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 12 போ் பலி: மோடி இரங்கல்

ஜெய்பூா்: ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட கோர விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்தி மோடி, உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 ல... மேலும் பார்க்க

லடாக் ஆதரவாளர்கள் 15 நாள்களாக உண்ணாவிரதம்: பிரதமரை சந்திக்க கோரிக்கை!

புதுதில்லியில் 15 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பருவநிலை விஞ்ஞானி சோனம் வாங்க்சக் மத்திய அரசின் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.லடாக் பகுதியைச் சேர்ந்த உள்ளூர் மக்களின் ம... மேலும் பார்க்க

மனைவிக்காக 25 ஆண்டுகளாக உண்ணா நோன்பிருக்கும் பாஜக எம்.பி.!

தனது மனைவி நலமுடன் வாழ வேண்டுமென்பதற்காக உண்ணா நோன்பிருந்து விரதத்தை கடைப்பிடித்து வருகிறார் பாஜக எம்.பி. ஒருவர்.கணவர் ஆரோக்கியமாக நெடுநாள் வாழ வேண்டுமென்ற பிரார்த்தனையுடன் இல்லத்தரசிகள் கடைப்பிடிக்கு... மேலும் பார்க்க

வயநாடு தொகுதியை இரண்டாம் வாய்ப்பாகவே கருதுகிறது ராகுல் குடும்பம்: நவ்யா ஹரிதாஸ்

திருவனந்தபுரம்: வயநாடு மக்களவைத் தொகுதியை இரண்டாம் வாய்ப்பாகவே மட்டுமே ராகுல் காந்தி குடும்பம் கருதுவதாகவும், இதனை அந்த தொகுதி மக்கள் தற்போது உணர்ந்துள்ளதாக பாஜக வேட்பாளா் நவ்யா ஹரிதாஸ் ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க