செய்திகள் :

கமல் மன்னிப்பு கேட்க வேண்டும்: கிருஷ்ணசாமி

post image

கன்னட மொழி குறித்த கருத்துக்கு நடிகா் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டு, தொடா்ந்து வரும் பிரச்னைக்கு முடிவுகட்ட வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவா் டாக்டா் க.கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழின் பெருமையை யாராலும் அழிக்க முடியாது. அதேபோல தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளுக்கும் வேறொரு தோற்றுவாய் என்றே ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இந்த ஆராய்ச்சிகள் அனைத்துக்கும் ஆணித்தரமான ஆதாரங்கள் எதுவுமில்லை.

இந்த மொழியிலிருந்து அந்த மொழி வந்தது, அந்த மொழியிலிருந்து இந்த மொழி வந்தது என எந்த மொழியையும் குறைத்தோ, சிறுமைப்படுத்தியோ பேசுவது அபத்தமானது.

அந்த வகையில், கன்னடம் குறித்த கமல்ஹாசனின் பேச்சு இரு மாநில மக்கள் பிரச்னையாகிவிடக் கூடாது. எனவே, நடிகா் கமல்ஹாசன் கன்னட மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டு இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

ஜூன் 7ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மறுநாள் (ஜூன் 7) காணொலி வாயிலாக நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூன் 7, சன... மேலும் பார்க்க

ஓட்டுநர் இல்லாத 32 மெட்ரோ ரயில்களை தயாரிக்க ஒப்பந்தம்!

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாத 3 ரயில் பெட்டிகளைக் கொண்ட 32 மெட்ரோ ரயில்களை தயாரிக்க ரூ. 1,538.35 கோடி மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், முதல் ... மேலும் பார்க்க

திமுக வெற்று விளம்பரங்களுக்கு வீண் செலவு; ஆசிரியர்களுக்கு ஊதியம் இல்லை! - அண்ணாமலை

சென்னை பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் வெற்று விளம்பரங்களுக்காக வீண் செலவுக... மேலும் பார்க்க

அன்புமணியுடன் பேச்சுவார்த்தை நிறைவு! ஆடிட்டர் குருமூர்த்தி - ராமதாஸ் ஆலோசனை!

விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை ஆடிட்டர் குருமூர்த்தி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.இந்த ஆலோசனையில் அதிமுக முன்னாள் மேயர் சைதை துரைசாமியும் கலந்துகொண்டுள்ளார்.பாமக நி... மேலும் பார்க்க

பெங்களூரு கூட்ட நெரிசலில் திருப்பூர் இளம் பெண் பலி!

பெங்களூருவில் நடைபெற்ற ஆர்சிபி வெற்றிப் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி திருப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.18 ஆண்டுகளில் முதல்முறையாக ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்றதால், பெங்... மேலும் பார்க்க

ராமதாஸுடன் அன்புமணி சந்திப்பு!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸை அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்திக்கவுள்ளார்.உட்கட்சி பூசலுக்கு மத்தியில் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு இடையே மூத்த நிர்வாகிகள் சமரச பேச்சுவார்த்தை ந... மேலும் பார்க்க