செய்திகள் :

கர்நாடகத்தில் 7 மாவட்டங்களில் லோக்ஆயுக்தா அதிகாரிகள் சோதனை!

post image

வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து குவித்தல், ஊழலில் ஈடுபடுவது குறித்த ரகசியத் தகவலைத் தொடர்ந்து கர்நாடக லோக்ஆயுக்தா ஏழு மாவட்டங்களில் உள்ள அரசு அதிகாரிகளுக்குச் சொந்தமாக இடங்களில் சோதனை நடத்தி வருகின்றது.

பெங்களூரு, கோலார், கலபுரகி, தாவணகெரே, தும்கூர், பாகல்கோட் மற்றும் விஜயபுரா மாவட்டங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. எட்டு அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அவர்கள் சொத்துக்கள் இருக்கும் இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

தாவணகெரே நகரில் நிஜலிங்கப்பா லேஅவுட்டில் உள்ள உணவு பாதுகாப்பு அதிகாரியின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. லோக்ஆயுக்தா காவல் கண்காணிப்பாளர் கவலப்பூர் தலைமையிலான குழு சோதனைகளை நடத்திவருகின்றது.

கலாபுராகி நகரில், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளரின் வீடு மற்றும் சொத்துக்கள் சோதனை செய்யப்பட்டு, கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பெங்களூருவில், புருஹத் பெங்களூரு மாநகர பாலிகே (BBMP) உடன் இணைக்கப்பட்ட ஒரு தலைமை பொறியாளர் மற்றும் ஒரு நிர்வாக பொறியாளரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

பெங்களூரு மின்சார விநியோக நிறுவனத்தில் (BESCOM) உதவி நிர்வாக பொறியாளருக்குச் சொந்தமான மூன்று இடங்களில் உள்ள சொத்துக்களும் சோதனை செய்யப்பட்டன.

தும்குருவில், தும்குருவ அரசு மருத்துவமனையில் இணைக்கப்பட்ட ஒரு மருத்துவரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இதற்கிடையில், பாகல்கோட் மாவட்டத்தின் பிலாகி நகரில், பொதுப்பணித் துறை முதல் பிரிவு எழுத்தரின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது.

சோதனைகள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கை கர்நாடக லோக்ஆயுக்தாவால் இன்னும் வெளியிடப்படவில்லை.

கர்நாடக பாடகியை கரம்பிடித்தார் பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா!

பெங்களூரு தெற்கு எம்பியும் பாஜக தேசிய இளைஞரணி தலைவருமான தேஜஸ்வி சூர்யாவுக்கும், தமிழகத்தைச் சேர்ந்த கர்நாடக பாடகி சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத்துக்கும் பாரம்பரிய முறையில் வேத மந்திரங்கள் முழங்க சென்னையில் திர... மேலும் பார்க்க

ஓநாய் தாக்குதலுக்கு அடுத்ததாக நாய்களிடம் சிக்கிய உ.பி.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் சிறுத்தை, யானை, ஓநாய் முதலான விலங்குகளின் தாக்குதலைத் தொடர்ந்து, தற்போது நாய்களின் தாக்குதலும் அதிகரித்து வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம்வரையில்... மேலும் பார்க்க

கங்கா மாதாவை மோடி அரசு ஏமாற்றிவிட்டது: கார்கே குற்றச்சாட்டு

கங்கையை சுத்தம் செய்கிறோம் என்ற பெயரில் மோடி அரசு கங்கா மாதாவை ஏமாற்றிவிட்டது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள முக்வா கங்கை அம்மன் கோயிலுக்குச... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: ரூ. 7,500 கோடி மூலம் ரூ. 3 லட்சம் கோடி ஈட்டிய உ.பி. அரசு

மகா கும்பமேளாவில் ரூ. 7,500 கோடி முதலீட்டில் ரூ. 3 லட்சம் கோடி பெறப்பட்டதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஜன. 13 முதல் பிப். 26 ஆம் தேதி வரை... மேலும் பார்க்க

மார்ச் 8 முதல் தகுதியான பெண்களுக்கு ரூ.2,500 உதவித்தொகை: பாஜக அறிவிப்பு!

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதியின்படி மார்ச் 8 முதல் தகுதியான பெண்களுக்கு ரூ. 2,500 உதவித்தொகை வழங்கப்படும் என்று பாஜக தேசிய பொதுச்செயலாளர் துஷ்யந்த் குமார் கௌதம் தெரிவித்தார். இது... மேலும் பார்க்க

வருமானம் மட்டுமல்ல; இனி இமெயில், சமூக வலைத்தளங்களையும் வருமான வரித் துறை ஆய்வு செய்யும்!

தனிநபரின் வருமானம் மட்டுமின்றி மின்னஞ்சல், சமூக வலைத்தள கணக்குகள், ஆன்லைன் முதலீடு உள்ளிட்டவற்றை அனுமதியின்றி வருமான வரித்துறை ஆய்வு செய்யும் நடைமுறை விரைவில் வரவுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர... மேலும் பார்க்க