செய்திகள் :

கல்வி விருது: 2-ம் கட்டமாக மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கும் விஜய்!

post image

பொதுத்தோ்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கும் இரண்டாம் கட்ட நிகழ்வில் தவெக தலைவர் விஜய் கலந்துகொண்டுள்ளார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தோ்வுகளில் தொகுதிகள் வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய், மாணவ, மாணவிகளை நேரில் அழைத்து தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக விருது வழங்கிப் பாராட்டி வருகிறார்.

முதல்கட்டமாக கடந்த மே 30-ஆம் தேதி பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலுள்ள மாவட்டங்களின் 84 தொகுதிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு விருதுகள், ஊக்கத்தொகையும் வழங்கும் இரண்டாம் கட்ட நிகழ்வு மாமல்லபுரத்தில் உள்ள விடுதியில் நடைபெற்று வருகின்றது.

இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ள தவெக தலைவர் விஜய், மாணவ, மாணவிகளுக்கு பரிசளித்து பாராட்டி வருகிறார்.

இதையும் படிக்க : டிரம்ப் அரசின் மசோதாவை கடுமையாக விமர்சித்த எலான் மஸ்க்!

ஜூலை 7ஆம் தேதி திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு !

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஜுலை 7ஆம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெறும் என திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள சுப்ப... மேலும் பார்க்க

பௌர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு ஜூன்10 -இல் சிறப்பு ரயில்

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில் பௌர்ணமி கிரிவலத்தையொட்டி, விழுப்புரத்திலிருந்து ஜூன் 10-ஆம் தேதி முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இதுகு... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக திமுக தலைமையில் தமிழ்நாடு அணிவகுக்கும்: முதல்வர் ஸ்டாலின்

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக திமுக தலைமையில் தமிழ்நாடு அணிவகுக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் நிகழும் தாமதமு... மேலும் பார்க்க

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ டிசம்பரில் பயன்பாடுக்கு வரும்: நிர்வாக இயக்குநர் சித்திக்

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ டிசம்பரில் பயன்பாடுக்கு வரும் என்று அதன் நிர்வாக இயக்குநர் சித்திக் தெரிவித்துள்ளார். சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல... மேலும் பார்க்க

கமலாலயத்தின் கருத்தைக் கூறும் எடப்பாடி பழனிசாமி! அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

தொகுதி மறுசீரமைப்பு குறித்து அதிமுக எந்த வகையிலும் பேசவில்லை என்று அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார்.தொகுதி மறுசீரமைப்பு குறித்து முன்னரே எச்சரித்ததாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியிருந்தார்.அவரின... மேலும் பார்க்க

மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் இன்பதுரை, தனபால் ஆகியோர் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் திமுக... மேலும் பார்க்க