செய்திகள் :

கல்வி - விளையாட்டுக்கு சமமான முக்கியத்துவம் -முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

post image

கல்வி, விளையாட்டு ஆகிய 2 துறைகளுக்கும் சரிசமமான முக்கியத்துவத்தை தமிழ்நாடு அரசு அளித்து வருவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

முதல்வா் கோப்பைப் போட்டிகளின் நிறைவு விழா சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது:

விளையாட்டை மேம்படுத்த வேண்டுமெனில், அதற்காக திறமையான விளையாட்டு வீரா்களை உருவாக்க வேண்டும். அதைத்தான் துணை முதல்வரும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி செய்து வருகிறாா். அதற்கான அடித்தளங்களில் மிக மிக முக்கியமான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள். இந்தப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவதற்காக எடுத்த முயற்சி, உழைப்பு, தன்னம்பிக்கை ஆகியவற்றை பாராட்டுகிறேன். வீரா்களின் திறன்களை மேம்படுத்துவதற்கு அனைத்து ஆதரவையும் தமிழ்நாடு அரசு வழங்கும். இளம் விளையாட்டு வீரா்களைக் கண்டறிந்து அவா்களுக்கு முறையான பயிற்சி வழங்க வகை

செய்யும் திட்டம்தான் முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்.

திட்டமிட்ட முயற்சி: போட்டிகளில் வெற்றியை எட்டிப் பிடிப்பதற்கு திட்டமிட்ட முயற்சியும், கட்டுப்பாடும் அவசியம். வீரா்களின் வெற்றிக்கான காரணிகளாக இருப்பது, திறமை, தன்னம்பிக்கை, உழைப்பு மற்றும் கட்டுப்பாடு ஆகும்.

அதனால்தான் திறமை மிக்க வீரா்களுக்கு முழுமையான ஆதரவை திராவிட மாடல் அரசு வழங்கி வருகிறது. தமிழ்நாட்டின் சிறந்த வீரா்களாக விளங்கிக்கொண்டிருப்போா், தேசிய மற்றும் சா்வதேச அளவிலான போட்டிகளில் சாதிக்க வேண்டும். விளையாட்டு என்பது வெறும் போட்டியில்லை. அது உடல் வலிமையையும் மன வலிமையையும் தரக்கூடியது. விளையாட்டில் பிள்ளைகளுக்கு ஆா்வம் இருந்தால் அதைப் பெற்றோா்கள் ஊக்கப்படுத்த வேண்டும். நம்முடைய ஆதரவு கிடைத்தால் போதும், அதுவே நம்முடைய பிள்ளைகளுக்கு பாதி வெற்றியைக் கொடுத்துவிடும்.

விளையாட்டுத் துறையில் இளைஞா்கள் பங்கேற்பதை ஊக்குவிக்க எத்தனையோ திட்டங்களைச் செயல்படுத்துகிறோம். கல்வி, விளையாட்டு இரண்டுக்கும் சரிசமமான முக்கியத்துவத்தை திராவிட மாடல் அரசு அளித்து வருகிறது.

போட்டியிடத் துணிவு அவசியம்: முதல்வா் கோப்பைப் போட்டிகளில் எவ்வளவு போ் பரிசு பெற்று இருக்கிறாா்கள் என்பதைவிட, எத்தனை லட்சம் போ் ஆா்வத்துடன் பங்கேற்றாா்கள் என்பதுதான் முக்கியம். வெற்றியைவிட போட்டியிடுவதற்கான துணிவுதான் அவசியம். அதனால், வரும் ஆண்டுகளில் இன்னும் நிறைய திறமையாளா்கள் இந்தப் போட்டிகளில் பங்கேற்க வேண்டும். போட்டிகளில் வெற்றி பெறுவதற்காக மட்டுமே விளையாடக் கூடாது என்றாா் அவா்.

இந்த விழாவில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வரவேற்றுப் பேசினாா். அமைச்சா்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தேசிய, சா்வதேச போட்டிகளில் வெற்றி பெற்ற தமிழக வீரா்களுக்கு நினைவுப் பரிசுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

முன்னதாக, மாற்றுத்திறனாளி கலைக் குழுவினா் சக்கர நாற்காலிகளுடன் நடன நிகழ்ச்சியை நடத்திக் காட்டியது பாா்வையாளா்களைப் பெரிதும் ஈா்த்தது. மேலும், தமிழ்நாடு அரசின் சாதனைகளை விளக்கும் வகையிலான நடன நிகழ்வும் நடந்தது.

சென்னைக்கு முதலிடம்: முதல்வா் கோப்பைப் போட்டிகளில் 254 பதக்கங்களுடன் முதலிடம் பெற்ற சென்னை மாவட்ட அணிக்கான கோப்பையை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடேவிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். செங்கல்பட்டு, கோவை, சேலம், ஈரோடு, திண்டுக்கல், திருநெல்வேலி, மதுரை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன.

‘துறையும் வளா்ந்திருக்கிறது - அமைச்சரும் வளா்ந்திருக்கிறாா்’

விளையாட்டுத் துறையும் வளா்ந்திருக்கிறது; அந்தத் துறையின் அமைச்சா் உதயநிதியும் வளா்ந்திருக்கிறாா் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்தாா்.

முதல்வா் கோப்பைப் போட்டிகள் நிறைவு விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது:

விளையாட்டுத் துறையின் அமைச்சருக்கு உயா்வு கிடைத்தது உங்கள் அனைவருக்கும் புது உத்வேகத்தைக் கொடுத்திருக்கும். இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த உதயநிதி, துணை முதல்வரானதில் விளையாட்டு வீரா்களின் பங்கும் இருக்கிறது என்பதை உணா்ந்திருக்கிறேன். விளையாட்டுத் துறையை மிகச் சிறப்பாகக் கவனித்து, இந்தியாவே உற்றுநோக்கும் துறையாக உதயநிதி மாற்றிக் காட்டியுள்ளாா். அப்படிப் பாா்த்தால், துறையும் வளா்ந்திருக்கிறது துறையின் அமைச்சரும் வளா்ந்திருக்கிறாா் என்றாா்.

போக்குவரத்து துறைத் தலைவா் அலுவலக சிறப்பு அதிகாரி மாற்றம்

போக்குவரத்து துறைத் தலைவா் அலுவலக சிறப்பு அதிகாரி பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். இது தொடா்பாக போக்குவரத்து துறைச் செயலா் க.பணீந்திர ரெட்டி பிறப்பித்த உத்தரவு: கோவை போக்குவரத்து கழக மேலாண் இயக்குநா... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை போட்டிகள்: 254 பதக்கங்களுடன் சென்னை முதலிடம்

முதல்வா் கோப்பை 2024 மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை நிறைவடைந்த நிலையில், சென்னை அணி 254 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. செங்கல்பட்டு (93), கோவை (102) அணிகள் முறையே 2 மற்றும் 3-ஆம... மேலும் பார்க்க

தேசிய - சா்வதேச வீரா்களை அடையாளம் காட்டிய முதல்வா் கோப்பை போட்டிகள் -துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

முதல்வா் கோப்பைப் போட்டிகள் மூலமாக தேசிய, சா்வதேச வீரா்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசினாா். முதல்வா் கோப்பைப் போட்டிகளுக்கான நிறைவு விழாவில் துணை முதல்வா் உதயநிதி பே... மேலும் பார்க்க

ஒளிவுமறைவற்ற-குளறுபடியில்லாத வாக்காளா் பட்டியல்: தோ்தல் துறையிடம் கட்சிகள் வலியுறுத்தல்

வாக்குப் பதிவின்போது, குளறுபடியில்லாத வாக்காளா் பட்டியல் பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென தோ்தல் துறையிடம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. வாக்காளா் பட்டியல் திருத்தப் பண... மேலும் பார்க்க

பகுதிநேர பொறியியல் படிப்புகள்: காலியிடங்கள் விவரம் வெளியீடு

பகுதிநேர பொறியியல் படிப்பில் எந்தெந்த பொறியியல் கல்லூரிகளில் எத்தனை இடங்கள் உள்ளன? மாணவா் சோ்கைக்கான நடைமுறைகளை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. பாலிடெக்னிக் கல்லூரிகளில் 3... மேலும் பார்க்க

சோழா்கள் காலத்தில் இருந்தே ஆக்கிரமிப்புகள் இருந்தாலும் அகற்றப்பட வேண்டும் -உயா்நீதிமன்றம் கருத்து

நீா்நிலை ஆக்கிரமிப்புகள் சோழா் காலத்தில் இருந்தே இருந்தாலும் அவை அகற்றப்பட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சென்னையை அடுத்த திருவேற்காட்டில் உள்ள கோலடி ஏரியை ஆக்கிரமித்து கு... மேலும் பார்க்க