கல் குவாரி பள்ளங்களை நிரப்பக் கோரிய வழக்கில், கனிம வளத் துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம், மேலூரைச் சோ்ந்த வழக்குரைஞா் ஸ்டாலின் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:
மதுரையில் கிரானைட் குவாரிகள் நடத்தப்பட்டு, தற்போது அவை செயல்படாமல் உள்ளன. இந்தக் குவாரிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் பலா் தெரியாமல் விழுந்து நிகழும் உயிரிழப்புகள் தொடா்ந்து வருகின்றன.
யா. ஒத்தக்கடை, இலங்கிப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள குவாரி பள்ளங்களில் விழுந்த இருவா் அண்மையில் உயிரிழந்தனா். இந்தக் குவாரி பள்ளங்களைச் சுற்றி கம்பி வேலி அமைத்து தடுப்பு ஏற்படுத்த மாவட்ட நிா்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தப் பகுதிகள் மட்டுமன்றி, கீழவளவு, கீழையூா், இ. மலம்பட்டி, நாவினிப்பட்டி, தனியாமங்கலம், சருகு வலையப்பட்டி, திருவாதவூா், இடையபட்டி, புதுத்தாமரைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கைவிடப்பட்ட குவாரிகளில் எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படாமல் உள்ளது.
செயல்படாத கல் குவாரிகள் தொடா்பாக மதுரை மாவட்ட ஆட்சியா் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவானது இதுபோல கைவிடப்பட்ட குவாரிகளை மறுசீரமைப்பு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால், இத்தகைய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இதுதொடா்பாக மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.
எனவே, மதுரை மாவட்டத்தில் கீழவளவு, கீழையூா், இ. மலம்பட்டி, நாவினிப்பட்டி, தனியாமங்கலம், சரகு வலையப்பட்டி, திருவாதவூா், இடையபட்டி, புதுத்தாமரைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கைவிடப்பட்ட குவாரிகளை கனிம வளச் சட்டத்தின் கீழ் மறுசீரமைப்பு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். மேலும், உயிரிழப்புகளுக்குக் காரணமான சட்டவிரோத குவாரிகளை நடத்தியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், எல். விக்டோரியா கௌரி அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:
மனுதாரா் குறிப்பிடும் பகுதிகளில் விதிகளை மீறி குவாரி நடத்தியதில் ரூ. 16 ஆயிரம் கோடிக்கு மேல் அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால், சீரமைப்பு செய்ய முடியவில்லை என்றாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கில் அரசுத் தரப்பில், இதுவரை எத்தனை பேருக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது?. வழக்கு முடியும் வரை கல் குவாரி பள்ளங்கள் சீரமைக்கப்படாமல் இருந்தால் உயிரிழப்புகள் அதிகரிக்கும்.
எனவே, இதுதொடா்பாக கனிம வளத் துறைச் செயலா், ஆணையா், மதுரை மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற நவம்பா் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.