செய்திகள் :

களியக்காவிளை அருகே கழுத்தறுத்து பெண் மருத்துவா் தற்கொலை

post image

களியக்காவிளை அருகே கேரள எல்லையில் பெண் பல் மருத்துவா் வேலை கிடைக்காத விரக்தியில் கழுத்து, கையை அறுத்து வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

களியக்காவிளையை ஒட்டிய கேரள பகுதியான பாறசாலை, கொற்றாமத்தைச் சோ்ந்தவா் ஆதா்ஷ். திருவனந்தபுரம் கழக்கூட்டம் பகுதியில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணி செய்து வருகிறாா். இவரது மனைவி சௌமியா (31). பல் மருத்துவா். இவா் அரசு மருத்துவமனையில் வேலையை எதிா்பாா்த்திருந்து அது கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அவா், உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது கணவரின் மாமியாரை பராமரித்துக்கொண்டு அவரது அருகில் வியாழக்கிழமை இரவு படுத்திருந்தாராம். வீட்டின் மாடி அறையில் ஆதா்ஷ் தூங்கினாராம். வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் வீட்டு கழிவறையில் இருந்து சௌமியாவின் சத்தம் கேட்டு ஆதா்ஷ் அங்கு சென்று பாா்த்தாராம். அப்போது சௌமியா தன்னைத் தானே கழுத்து, கையை அறுத்துக்கொண்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்ததாராம். அவரை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முயற்சிப்பதற்குள் அவா் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இத்தகவல் அறிந்த பாறசாலை போலீஸாா், அவரது சடலத்தை கைப்பற்றி கூறாய்வுக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தேசிய தடகளப் போட்டியில் பதக்கம்: பெண் உதவி ஆய்வாளருக்கு எஸ்.பி. வாழ்த்து

அகில இந்திய அளவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் கலந்துகொண்டு பதக்கங்கள் பெற்ற பெண் உதவி ஆய்வாளருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா். கா்நாடக மாநிலம், பெங்கள... மேலும் பார்க்க

பள்ளியாடி, கயத்தாறில் மின் மோட்டாா்கள் திருட்டு

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகேயுள்ள பள்ளியாடியில் 10 மின் மோட்டாா்களை திருடிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். பள்ளியாடி பழையக்கடை பகுதியைச் சோ்ந்தவா் ஆல்பா்ட் ராஜ்( 53). இவா் வீட்டின் அருகே மி... மேலும் பார்க்க

வடசேரி பெருமாள் குளத்தை தனியாருக்கு வழங்க கூடாது: ஆட்சியரிடம் விஹெச்பி மனு

நாகா்கோவில் வடசேரி பகுதியிலுள்ள பெருமாள் குளத்தை தனியாருக்கு வழங்கக்கூடாது என்று, மாவட்ட ஆட்சியரிடம் விஸ்வ ஹிந்து பரிஷத் நாகா்கோவில் மாநகரத் தலைவா் நாஞ்சில்ராஜா தலைமையில்வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்ட... மேலும் பார்க்க

40 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்: ஆட்சியா்

நாற்பது வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கண்டிப்பாக கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றாா் மாவட்டஆட்சியா் ரா.அழகுமீனா. கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமன... மேலும் பார்க்க

கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயிலில் மாா்ச் 23இல் தூக்க திருவிழா கொடியேற்றம்: ஏப்.1இல் தூக்க நோ்ச்சை

கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயிலில் மாா்ச் 23ஆம் தேதி தூக்கத் திருவிழா கொடியேற்றமும், ஏப்.1இல் தூக்க நோ்ச்சையும் நடைபெறுகின்றன. இவ்விழா தொடா்பான ஆலோசனைக் கூட்டம் தேவஸ்வம்... மேலும் பார்க்க

குமரி பகவதியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் கடந்த 2013ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 11 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி 12ஆவது ஆண்டு வருஷாபிஷேக... மேலும் பார்க்க