Jio - Hotstar : டொமைனை வைத்துக்கொண்டு ரூ.1 கோடி கேட்கும் டெவலபர் - என்ன செய்யப்ப...
கள்ளக்குறிச்சி: சிறுமிகள் பாலியல் வன்கொடுமை... கர்ப்பம்! - தலைமை ஆசிரியர் உட்பட இருவர் மீது குண்டாஸ்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆதி திராவிடர் நல ஆரம்பப் பள்ளியில், R.R குப்பத்தைச் சேர்ந்த 52 வயதான துரை அரசன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். அதே பள்ளியில் படித்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு, பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் போக்சோ வழக்கின் கீழ் அவரை கைதுசெய்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
அதேபோல... கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், கடுவனூர் கிராமத்தைச் சேர்ந்த 23 வயது பாலசக்தி என்பவர், 14 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். ஒருநாள் அந்த சிறுமி வயிறு வலியால் துடித்தபோது, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் அவரது தாய்.
அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். அதைக் கேட்டு அதிர்ந்து போன சிறுமியின் தாய், திருக்கோயிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கின்றனர். அதையடுத்து போக்சோ வழக்கின் கீழ் பாலசக்தியை கைது செய்த போலீஸார், அவரையும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர். இந்த இருவரும் தொடர் குற்றங்களில் ஈடுபட வாய்ப்பிருக்கிறது என்பதால், இவர்களை குண்டாஸ் பிரிவில் சிறையில் அடைக்க வேண்டும் என்று, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தார் எஸ்.பி ரஜத் சதுர்வேதி. அதனடிப்படையில் இருவரையும் குண்டாஸ் பிரிவில் ஒரு வருடம் சிறையில் அடைக்க உத்தரவிட்டிருக்கிறார் கள்ளக்குறிச்சி ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த்.