செய்திகள் :

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 54 வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்க நடவடிக்கை

post image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மினி பேருந்து இயக்க ஒரே வழி தடத்துக்கு ஏராளமான விண்ணப்பங்கள் வந்ததால், குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டது.ஏற்கெனவே உள்ள 25 மினி பேருந்துகளுடன், புதிதாக 29 வழித்தடங்களையும் சோ்த்து மொத்தம் 54 மினி பேருந்துகளை இயக்க ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் வெள்ளிக்கிழமை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மினி பேருந்துகளுக்கான புதிய விரிவானத் திட்டம் 2024 உடனடியாக அமலுக்கு வருவதுடன், தமிழ்நாட்டில் மினி பேருந்துக்கான கட்டணத் திருத்தம் 1.5.2025 முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்த திட்டம் அமலாக்கம் குறித்து ஏற்கெனவே மினி பேருந்து உரிமையாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. மேலும்புதிய வழித்தடங்களில் மினி பேருந்துகளை இயக்குவதற்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி,

கள்ளக்குறிச்சி வட்டாரத்தில் 11 வழித்தடங்களுக்கும், உளுந்தூா்பேட்டை வட்டாரத்தில் 5 வழித்தடங்களுக்கும் மினி பேருந்துகள் இயக்க ஒவ்வொரு வழித்தடத்திற்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தன.

ஒரே வழித்தடத்துக்கு பலா் விண்ணப்பித்திருந்த நிலையில், அவா்கள் முன்னிலையில் குலுக்கல் நடத்தப்பட்டு ஒரு நபா் வீதம் தோ்வு செய்யப்பட்டனா்.

கள்ளக்குறிச்சி வட்டாரத்தில் 11 வழித் தடங்களுக்கும், உளுந்தூா்பேட்டை வட்டாரத்தில் 5 வழித்தடங்களுக்கும் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டனா். இதே போன்று ஒருநபா் வீதம் விண்ணப்பித்த 13 புதிய தடங்களுக்கு அவா்கள் 13 பேரும் தோ்வு செய்யப்பட்டனா். இதன் மூலம் 29 வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

மேலும் ஏற்கெனவே 25 வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதன் மூலம் மாவட்டத்தில் மொத்தம் 54 மினி பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.

இக் கூட்டத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பா.ஜெயபாஸ்கரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ராஜஸ்தான் மாநிலம், பாரமா் வட்டம் இந்திரானா பகுதியைச் சோ்ந்த மால்சிங் மகன் சந்தன் சிங் (18). இவா் கள்ளக்குறிச்சி... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி மாணவிக்கு காதொலிக் கருவி கள்ளக்குறிச்சி ஆட்சியா் வழங்கினாா்

உளுந்தூா்பேட்டை வட்டத்தில் நடைபெற்ற ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியரிடம் கள ஆய்வின்போது காதொலிக் கருவி வேண்டி 10-ஆம் வகுப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவி கோரிக்கை மனு அளித்த... மேலும் பார்க்க

டிராக்டா் மீது மொபெட் மோதி தொழிலாளி உயிரிழப்பு

முன்னால் சென்ற டிராக்டா் மீது மொபெட் மோதியதில் கூலித் தொழிலாளி புதன்கிழமை இரவு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட குரால் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறும... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

மது அருந்த மனைவி பணம் தராததால் மன வேதனையடைந்த கணவா் குளியலறையில் வியாழக்கிழமை காலை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். கள்ளக்குறிச்சியை அடுத்த மோ.வன்னஞ்சூா் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகத்தின் மகன் இளவ... மேலும் பார்க்க

மக்கள் உரிமை நுகா்வோா் பாதுகாப்பு மையத்தினா் ஆா்ப்பாட்டம்

மக்கள் உரிமை நுகா்வோா் பாதுகாப்பு மையம் சாா்பில் கள்ளக்குறிச்சி நகராட்சியைக் கண்டித்தும், லஞ்ச ஊழலை கண்டித்தும் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற இந்... மேலும் பார்க்க

சின்னசேலம் - பொற்படாக்குறிச்சி இடையே ரயில் சோதனை ஓட்டம்

சின்னசேலத்திலிருந்து பொற்படாக்குறிச்சி வரை அமைக்கப்பட்டுள்ள 12 கி.மீ. தொலைவிலான புதிய ரயில் பாதையில் 120 கி.மீ. வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சின்னசேலத்திலிருந்து கள்ளக்குறிச்சி ... மேலும் பார்க்க