செய்திகள் :

காட்பாடி அருகே விவேக் விரைவு ரயிலில் கோளாறு! ரயில் சேவை பாதிப்பு

post image

காட்பாடி அருகே சென்று கொண்டிருந்த விவேக் விரைவு ரயிலில் ஏற்பட்ட கோளாறால் ஒரு மணிநேரத்துக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டது.

அஸ்ஸாம் மாநிலம் திப்ரூகரில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சென்றுகொண்டிருந்த விவேக் விரைவு ரயில்(22504), காட்பாடி அருகே இன்று காலை 9 மணியளவில் சென்று கொண்டிருந்தது.

அப்போது என்ஜினுடன் பெட்டிகளை இணைக்கும் கப்ளிங் என்ற லாக்கர் உடைந்ததால், பெட்டிகள் தனியாக கழன்று என்ஜின் மட்டும் சிறிது தூரம் ஓடி நின்றது.

தண்டவாளத்தில் உடைந்து விழுந்த கப்ளிங்.

அசம்பாவிதம் தவிர்ப்பு

முகுந்த ராயபுரம் - திருவலம் இடையே பாலாற்றின் குறுக்கே இருக்கும் ரயில் பாலத்தை 20 கி.மீ. வேகத்தில் மட்டுமே ரயில்கள் கடக்க வேண்டும் என்பதால், ரயிலின் மெதுவாக இயக்கப்பட்ட சமயத்தில் லாக்கர் உடைந்துள்ளது. இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, ரயில்வே ஊழியர்கள் புதிய லாக்கரை கொண்டு வந்து பொறுத்திய பிறகு, ஒன்றரை மணிநேரம் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது.

இதனால், அந்த வழித்தடத்தில் இயக்கப்பட்ட அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

மதுரையை திக்குமுக்காட வைத்த மழை: போக்குவரத்து நெரிசல், வாகன ஓட்டிகள் அவதி!

மதுரை: வடகிழக்குப் பருவமழை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக பெய்து வருகிறது. மதுரையில் இதுவரை இல்லாத வகையில் கடந்த ஒரு சில நாள்களாக பெய்து வரும் மழை காரணமாக அப்பகுதி மக்கள் திக்குமுக்க... மேலும் பார்க்க

14 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மே... மேலும் பார்க்க

மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை! இந்த முறை உதயநிதி விழாவில்...

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து சரியாகப் பாடப்படவில்லை என்ற சர்ச்சை எழுந்துள்ளது.சென்னையில் முதலமைச்சர் புத்தாய்வுத் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றி... மேலும் பார்க்க

தீபாவளியன்று கோயம்பேடு மார்க்கெட் செயல்படும்! பதிலாக...

சென்னை கோயம்பேடு வணிக வளாகம் தீபாவளியன்று(அக்.31) செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை வருகிற அக். 31 ஆம் தேதி(வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையடுத்து அன்றைய தினம் கோயம்பேடு வணிக வள... மேலும் பார்க்க

இதய வாசலைத் திறந்து வைத்துக் காத்திருப்பேன்: தவெக தலைவர் விஜய்

உங்கள் வருகைக்காக வி.சாலை எல்லையில், என் இரு கரங்களையும் விரித்தபடி, இதய வாசலைத் திறந்து வைத்துக் காத்திருப்பேன் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கூறியிருக்கிறார்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண... மேலும் பார்க்க

18 ஏக்கர் சிதம்பரம் நடராஜா் கோயில் நிலம் விற்பனை - இந்துசமய அறநிலையத்துறை!

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சொந்தமான 18 ஏக்கர் நிலத்தை, பொது தீட்சிதர்கள் விற்பனை செய்துவிட்டதாக, ஆவணங்களுடன் தமிழக இந்துசமய அறநிலையத் துறை, சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்திருந்தது.சென்... மேலும் பார்க்க