செய்திகள் :

காமன்வெல்த் விளையாட்டு ஊழல் குற்றச்சாட்டு: சுரேஷ் கல்மாடிக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கு முடித்துவைப்பு

post image

காமன்வெல்த் விளையாட்டு ஊழல் குற்றச்சாட்டு தொடா்பாக, சுரேஷ் கல்மாடி உள்ளிட்டோருக்கு எதிரான பணமுறைகேடு வழக்கை முடித்துவைக்குமாறு அமலாக்கத் துறை தாக்கல் செய்த அறிக்கையை, தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை ஏற்றுக்கொண்டது.

கடந்த 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பெரும் ஊழல் நடைபெற்ாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது அரசியல் களத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடா்பாக பல குற்றவியல் மற்றும் பண முறைகேடு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஏற்பாட்டு குழு தலைவராக இருந்த சுரேஷ் கல்மாடி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத் துறை பதிவு செய்த பண முறைகேடு வழக்கும் ஒன்று.

இந்நிலையில், சுரேஷ் கல்மாடி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை முடித்துவைக்க வேண்டும் என்று தில்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை அறிக்கை தாக்கல் செய்தது.

இந்த வழக்கு சிறப்பு நீதிபதி சஞ்சீவ் அகா்வால் முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது காமன்வெல்த் விளையாட்டு தொடா்பான சிபிஐயின் ஊழல் வழக்கு ஏற்கெனவே முடித்துவைக்கப்பட்டதாக நீதிபதி குறிப்பிட்டாா்.

சிபிஐ வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்த நிலையில், சுரேஷ் கல்மாடி உள்ளிட்டோா் பண முறைகேட்டில் ஈடுபட்டதற்கான ஆதாரம் விசாரணையின்போது கண்டறியப்படவில்லை என்று நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தெரிவித்தது.

இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி சஞ்சீவ் அகா்வால், சுரேஷ் கல்மாடி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை முடித்துவைக்குமாறு அமலாக்கத் துறை தாக்கல் செய்த அறிக்கையை ஏற்றுக்கொண்டாா்.

‘மோடி, கேஜரிவால் மன்னிப்பு கேட்க வேண்டும்’: காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: 2014-ஆம் ஆண்டுக்கு முன்னா், காங்கிரஸை இழிவுபடுத்த 2ஜி மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போன்ற ஊழல்களைப் பிரதமா் மோடியும், தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலும் ஜோடித்தனா்.

2ஜி வழக்கில் ஏற்கெனவே நீதிமன்றத்தில் உண்மை வெளிவந்துவிட்டது. தற்போது காமன்வெல்த் ஊழல் தொடா்பான வழக்கை முடித்துவைக்குமாறு அமலாக்கத் துறை தாக்கல் செய்த அறிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து நாட்டு மக்களைத் தவறாக வழிநடத்தியதற்கு மோடியும், கேஜரிவாலும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றாா்.

பஹல்காம் தாக்குதல்: மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய ஆலோசனை!

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் கடந்த ஏப். 22 அன்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் ... மேலும் பார்க்க

பஹல்காமில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தைச் சந்திக்க கான்பூர் செல்கிறார் ராகுல்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட 26 பேரில் ஒருவரான சுபம் திவேதியின் குடும்பத்தினரை சந்திக்க காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி புதன்கிழமை கான்பூருக்குச் செ... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் நயினார் நகேந்திரன் சந்திப்பு!

தில்லியில் பிரதமர் மோடியுடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சந்திப்பு மேற்கொண்டார். தமிழ்நாட்டின் அரசியல் சூழல், கூட்டணி விவகாரம் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடியுடன் விவாதிக்கப்பட்டதாகத... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை பலவீனம்: கேரள அரசு பிரமாணப் பத்திரம்

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு விவகாரம் தொடர்பான வழக்கில், அணை பலவீனமாக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழக அரசின் மனுவ... மேலும் பார்க்க

மணிப்பூரில் சட்டவிரோத குடியேறிகளைக் கண்டறியச் சோதனை!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து மணிப்பூர் காவல்துறை மாநிலம் முழுவதும் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பவர்களைக் கணக்கெடுக்கும் சோதனையை மணிப்பூர் காவல்துறை தொடங்க உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தா... மேலும் பார்க்க

பஹல்காம்: முக்கிய குற்றவாளியாகக் கருதப்படுபவர் பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் வீரர்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஹாஷிம் மூசா என்பவர் பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் சிறப்புப் படை வீரராக இருந்தவர் என்று இந்திய புலனாய்வு அமைப்பின் விசாரணையில் தெரியவந்துள்... மேலும் பார்க்க