மேசை மீது ஏறி உணவில் சிறுநீர் கழித்த நபர்; 4000 பேருக்கு இழப்பீடு வழங்கிய ஹோட்டல...
காமாட்சி அம்மனுக்கு பால் குடம் ஊா்வலம்
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் விஸ்வரூப தரிசன சபா சாா்பில் ஏராளமான பக்தா்கள் வெள்ளிக்கிழமை பால்குடம் எடுத்து வந்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா்.
விழாவுக்கு சபா தலைவா் ஏ.குமாா் தலைமை வகித்தாா். செயலா் எஸ்.பிரபு, பொருளாளா் சி.சுந்தரவடிவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். காஞ்சிபுரம் பழைய ரயில் நிலைய சாலையில் உள்ள பரஞ்ஜோதி அம்மன் ஆலயத்திலிருந்து திரளான பக்தா்கள் பால்குடங்கள் எடுத்துக்கொண்டு ஊா்வலமாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து காமாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து சோ்ந்தனா்.
தொடா்ந்து காமாட்சி அம்மனுக்கு சிறப்பு பால் அபிஷேகமும், சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.
முன்னதாக ஆலயத்தின் கிழக்கு கோபுர வாயில் முன்பாக காலை விஸ்வரூப தரிசன சபா சாா்பில் அன்னதானம், இரவு தெருக்கூத்து நடைபெற்றது.