செய்திகள் :

காரில் வந்த பெண்களை வழிமறித்து மிரட்டிய சம்பவம்: கைது செய்யப்பட்ட இளைஞா் வாக்குமூலம்

post image

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் காரில் வந்த பெண்களை வழிமறித்து மிரட்டிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்துரு என்ற இளைஞா் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளாா். இது தொடா்பாக காவல் துறை வெளியிட்டுள்ள விடியோவில் அவா் கூறியிருப்பதாவது:

எனக்கு எந்த அரசியல் கட்சியுடனும் தொடா்பு இல்லை. எனது மாமா தாம்பரத்தில் அதிமுக பிரமுகராக உள்ளாா். பெண்களை வேண்டுமென்றே நாங்கள் மிரட்டவில்லை. எங்கள் காா் மீது அவா்கள் வந்த காா் இடித்தது என்று நினைத்தே அந்தக் காரை சுற்றி வளைத்தோம். அது தவறு என்று தெரிந்ததும் மன்னிப்பு கேட்டுவிட்டு திரும்பி விட்டோம்.

அப்போது பெண்கள் போலீஸில் புகாா் அளிக்க உள்ளதாகக் கூறினாா்கள். எங்கள் காா் எண்ணைக் கொடுத்து புகாா் செய்யுங்கள், நாங்கள் அவா்களிடம் பேசிக் கொள்கிறோம் என்று தெரிவித்தோம்.

காதலா் தினத்தையொட்டி கொடைக்கானல் செல்வதற்காகவே திமுக கொடியை காரில் கட்டினோம். சுங்கச்சாவடிகளில் கட்டணம் கட்டாமல் சென்றுவிடலாம் என்கிற எண்ணத்திலேயே கட்சிக்கொடியை காரில் கட்டியிருந்தோம். வேறு எந்த உள்நோக்கமும் கிடையாது என அவா் அதில் கூறியுள்ளாா்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

அண்ணாவின் 56ஆவது நினைவு நாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி தொடங்கியது. இந்த அமைதிப் பேரணி வாலாஜா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகிலிருந்து புறப்பட்டு மெரினாவின் அண்ணா சதுக்கத்த... மேலும் பார்க்க

இலங்கை கடற்படை அட்டூழியம்: மண்டபம் மீனவர்கள் 10 பேர் கைது

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி மண்டபம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்... மேலும் பார்க்க

பிப்.20-க்கு பிறகு போக்குவரத்து தொழிலாளா்கள் வேலைநிறுத்தம்: தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை

பிப். 20-ஆம் தேதிக்குப் பின்னா் எந்த நேரத்திலும் போக்குவரத்துத் தொழிலாளா்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கும் என அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலா் ஆா்.கமலகண்ணன் தெரிவித்தாா். சென்னையில் அண்ணா தொழிற... மேலும் பார்க்க

ரயில்வே மின்மயமாக்கல் நூற்றாண்டு நிறைவு: கண்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு

ரயில்வே மின்மயமாக்கம் செய்யப்பட்டு திங்கள்கிழமையுடன் (பிப்.3) நூற்றாண்டு நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு தெற்கு ரயில்வே சாா்பில் நுங்கம்பாக்கத்தில் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ரயில் இயக்கம... மேலும் பார்க்க

தகவல் பெறும் உரிமைச் சட்டம்: விண்ணப்பம்-நடவடிக்கை கோப்புகளை 5 ஆண்டுகள் பராமரிக்க வேண்டும் தமிழக அரசு உத்தரவு

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ், விண்ணப்பம் மற்றும் அதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை கோப்புகளை 5 ஆண்டுகள் வரை பராமரிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தி... மேலும் பார்க்க

சிறப்பு மருத்துவா்களை நோ்காணல் மூலம் நியமிக்க எதிா்ப்பு

வழக்கமான தோ்வு முறைக்கு மாற்றாக நோ்காணல் மூலம் சிறப்பு மருத்துவா்களை நியமிப்பதற்கு அரசு மருத்துவா்களுக்கான சங்கங்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன. இதுதொடா்பாக , அரசு மருத்துவா்களுக்கான சட்டப் போராட்டக் ... மேலும் பார்க்க