செய்திகள் :

கார் ஓட்டும்போது கருப்பு நிற ஷர்ட் அணியக்கூடாதா?

post image

பொதுவாகவே வாகன ஓட்டிகளுக்கு பல விதிமுறைகள் வகுக்கப்பட்டு, அவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும், இல்லாவிட்டால் அபராதம் விதிக்கும் நிலை நடைமுறையில் உள்ளது.

ஆனால், கார் ஓட்டும்போது கருப்பு நிற ஷர்ட் அணியக் கூடாது, அணிந்தால் ரூ.1000 அபராதம் வசூலிக்கப்படும் என்று தற்போது சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

இது சாலை விதிமுறை அல்ல... சொல்வதற்கும் காரணம் இருக்கிறது. அதாவது, கார் ஓட்டும்போது, கருப்பு நிற சட்டை அல்லது டி-ஷர்ட் அணிவதால் சாலையோரங்களில் இருக்கும் செயற்கை நுண்ணறிவு கேமராக்களால், நீங்கள் அணிந்திருக்கும் சீட் பெல்ட்டை அடையாளம் காண முடியாமல் போகலாம். இதனால், சீட் பெல்ட் அணியவில்லை என்று கூறி, தேவையின்றி ரூ.1,000 அபராதம் விதிக்கப்படலாம் என்கின்றன தகவல்கள்.

கருப்பு மற்றும் அடர் நிற ஆடைகளை அணிந்திருப்பவர்கள், சீட் பெல்ட் அணிந்திருப்பதை, சில சிசிடிவி கேமராக்களால் தனித்துக் கவனிக்க முடியாமல் போவதாகவும், அதனால் அ பராதம் விதிக்கப்படுவதாகவும் கடந்த காலங்களில் பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்துள்ளன.

தற்போது, சாலை விதிகளை, வாகன ஓட்டிகள் பின்பற்ற வைப்பதில், கேமராக்கள்தான் முக்கியப் பங்காற்றுகின்றன. ஹெல்மெட் போடாமல் வாகனம் ஓட்டினால், பின்னால் அமர்ந்திருப்பவர் ஹெல்மெட் அணியாமல் வந்தால், புகைப்படத்துடன் வாகன ஓட்டிக்கு அபராதம் விதிக்கப்படும் தகவல் வந்துவிடுகிறது.

இதனால்தான், தானியங்கி கேமரா வசதியுடன் அபராதம் விதிக்கப்படும் வசதி கொண்ட பகுதிகளில் அடர்நிற ஆடை அணிந்திருப்பவர்களுக்குத் தேவையற்ற அபராதங்கள் விதிக்கப்படும் நிலையும் ஏற்படுகிறது.

அண்மையில், இதுபோன்று தவறாக அடையாளம் காணப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டதாக, தானியங்கி கேமராக்கள் அதிகம் இருக்கும் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் ஏராளமானோர் சமூக வலைதளங்களில் புகார் அளித்திருந்தனர்.

அதாவது, சீட் பெல்ட் நிறமும், அணிந்திருக்கும் கோட் அல்லது ஷர்ட் நிறமும் ஒன்றாக இருப்பதால், தாங்கள் சீட் பெல்ட் அணிந்திருந்தாலும் கூட அபராதத்துக்கான செல்லான் வந்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

எனவே, கார் தயாரிப்பு நிறுவனங்கள், வித்தியாசமான நிறங்களில் சீல் பெல்ட்களை தயாரிக்க வேண்டும் என்றும் அவர்கள் யோசனை தெரிவித்திருந்தனர். அதுவரை கார் ஓட்டிகள்தான் கவனமாக இருக்க வேண்டும்.

தெலங்கானா விபத்து: மீட்புப் பணியில் கேரள 'கடாவர்' நாய்கள்!

காணாமல் போன மனிதர்கள், சடலங்களை கண்டறிவதற்கான சிறப்பு பயிற்சி பெற்ற கேரளத்தைச் சேர்ந்த மோப்ப நாய்கள் தெலங்கானா சுரங்க விபத்து பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளன. தெலங்கானாவில் உள்ள நாகா்கா்னூல் மாவட... மேலும் பார்க்க

மூன்று அல்ல பத்து மொழிகளை ஊக்குவிக்கப் போகிறேன்: சந்திரபாபு நாயுடு

ஆந்திரப் பிரதேச பல்கலைக்கழகங்களில் மூன்று அல்ல, பத்து மொழிகளை ஊக்குவிக்கப் போகிறேன் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.தேசிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழிக் கல்விக் கொள்கைக்... மேலும் பார்க்க

பிரிட்டனில் அமைச்சர் ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் முயற்சி!

பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளனர்.மேலும், இந்திய தேசியக் கொடியை அமைச்சர் முன்னிலையில் கிழித்ததால... மேலும் பார்க்க

இந்திய தொழில்நுட்ப மறுமலா்ச்சி வளா்ச்சிப் பயணத்துக்கு உத்வேகம் -அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

அஸ்வினி வைஷ்ணவ்- மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை, ரயில்வே, செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா்மகாராஷ்டிர மாநிலம், பாராமதியில், சிறு விவசாயி ஒருவா் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூ... மேலும் பார்க்க

டிஜிட்டல் முறைகள் மூலம் நிா்வாகிகள் திறன் மேம்பாடு: தோ்தல் ஆணையம்

தோ்தல் துறை நிா்வாகிகளின் திறனை மேம்படுத்த டிஜிட்டல் முறைகள் பயன்படுத்தப்படும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்தது. புது தில்லியில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைமை தோ்தல் அதிகாரிகளின் ... மேலும் பார்க்க

பாஜகவின் வளா்ச்சிக்கு உதவும் காங்கிரஸ் -கேரள முதல்வா் குற்றச்சாட்டு

திருவனந்தபுரம் : பாஜகவின் வளா்ச்சிக்கு காங்கிரஸ் பல்வேறு வகையில் உதவிகரமாக இருந்து வருகிறது. அண்மையில் தில்லியில் பாஜக ஆட்சியைப் பிடிக்கவும் காங்கிரஸ்தான் மறைமுகமாக உதவியது என்று கேரள முதல்வா் பினராயி... மேலும் பார்க்க