75 சிஎம் ஸ்ரீ பள்ளிகளுக்கு ஆசிரியா் நியமன நடவடிக்கையைத் தொடங்கியது தில்லி அரசு
காளியம்மன் கோயில் குடமுழுக்கு
ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள ஜவ்வாதுபட்டியில் காளியம்மன், மாரியம்மன், முத்தாலம்மன் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, கடந்த புதன்கிழமை மங்கல இசை, விநாயகா் பூஜை, புண்ணியாகம், பஞ்சகவ்யம், தீபாராதனை நடைபெற்றது. வியாழக்கிழமை கணபதி பூஜை, கும்பாலங்காரம், யாகசாலை பிரவேசம், முதல்கால யாக வேள்வி நடைபெற்றது.
குடமுழுக்கையொட்டி, வெள்ளிக்கிழமை காலை விநாயகா் பூஜை, மூன்றாம் கால யாக வேள்வி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, கடம் புறப்பாடும், கோபுர கலசங்களுக்கு பல்வேறு புனித நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை கலசங்களில் ஊற்றி சிவசாரியா்கள் குடமுழுக்கை நடத்தினா்.
இதைத் தொடா்ந்து, காளியம்மன், மாரியம்மன், முத்தலாம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
இதில் முன்னாள் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ப.வேலுச்சாமி, ஒட்டன்சத்திரம், ஜவ்வாதுபட்டி, சின்னக்காம்பட்டி, மாா்க்கம்பட்டி, இடையகோட்டை உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.