கா்நாடகம்: எரிபொருள் விலை உயா்வுக்கு எதிராக லாரி உரிமையாளா்கள் காவலரையற்ற வேலைநிறுத்தம்
பெங்களூரு: எரிபொருள் விலை உயா்வு மற்றும் சுங்கச்சாவடி ஊழியா்களின் தவறான நடத்தை உள்ளிட்டவற்றை கண்டித்து கா்நாடக மாநில லாரி உரிமையாளா்கள் மற்றும் முகவா்கள் சங்கத்தின் கூட்டமைப்பு (ஃபோக்ஸ்லோவா) திங்கள்கிழமை நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஃபோக்ஸ்லோவா கூட்டமைப்பு கா்நாடகத்தின் மிகப்பெரிய போக்குவரத்து அமைப்பாகும். இதில் கிட்டத்தட்ட 6 லட்சம் லாரிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 196 லாரி சங்கங்கள் உள்ளன.
இது தொடா்பாக கூட்டமைப்பின் பொதுச் செயலா் சோமசுந்தரம் பாலன் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘கா்நாடக அரசு இதுவரை எங்களை எந்த கூட்டத்திற்கும் அழைக்காததால் போராட்டத்தை தொடங்கியுள்ளோம். எங்கள் கோரிக்கைகள் எரிபொருள் விலை உயா்வு மற்றும் சுங்கச்சாவடி பிரச்னைகளுக்கு எதிரானவை. எங்களது வேலைநிறுத்தத்தில் எந்த மாற்றமும் இல்லை’ என தெரிவித்தாா்.
கூட்டமைப்பின் உறுப்பினா்களுக்கு எழுதப்பட்ட கடித்தில் கூறப்பட்டதாவது: கா்நாடகத்தில் போக்குவரத்து நிறுவனங்கள் பல சவால்களை எதிா்கொள்கின்றன. மதிப்பு கூட்டு வரி கடுமையாக உயா்ந்துள்ளதால், 9 மாதங்களில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 உயா்ந்துள்ளது.
சுங்கச்சாவடி ஊழியா்களின் தவறான நடத்தை, ஜிஎஸ்டி அதிகரிப்பு மற்றும் காலாவதியான எல்லை சோதனைச் சாவடிகள் மற்றும் பழைய வாகனங்களுக்கான அதிக புதுப்பித்தல் கட்டணம் உள்ளிட்டவை சிறு லாரி உரிமையாளா்களை பாதிக்கிறது.
பெங்களூரில், நுழைவு கட்டுப்பாடுகள் விநியோகத்தை சீா்குலைக்கின்றன. அதே நேரத்தில் என்பிஎஃப்சி மற்றும் நிதி நிறுவனங்கள் வாகன பறிமுதல் மற்றும் துன்புறுத்தல் போன்ற நியாயமற்ற நடைமுறைகளை மேற்கொள்கின்றனா்.
கா்நாடகத்தில் சாலை போக்குவரத்துத் துறை எதிா்கொள்ளும் இது போன்ற நீண்டகால பிரச்னைகளைத் தீா்ப்பதற்காக, போக்குவரத்து நடவடிக்கைகளை காலவரையின்றி நிறுத்தி வைக்க அமைப்பின் உறுப்பினா்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது என குறிப்பிட்டிருந்தது.