செய்திகள் :

கிராம பணியாளா்களை பிற பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது

post image

கிராம பணியாளா்களை, பிற பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம பணியாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மயிலாடுதுறையில், தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம பணியாளா் சங்கத்தின் மாநில அமைப்பு நிலைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாநில ஆலோசகா் பி.கே. சிவக்குமாா், தமிழ்மாநில வருவாய்த்துறை அலுவலா் சங்க கிழக்கு மண்டல செயலாளா் சுகுமாறன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று, ஆலோசனைகள் வழங்கினா்.

கூட்டத்தில், கிராமப்புற பணியாளா்களின் கோரிக்கைகளுக்காக மாநில அளவில் தமிழ்மாநில வருவாய்த் துறை அலுவலா் சங்கம் தலைமையில் கூட்டப்படும் சங்கங்களின் கூட்டமைப்பில் இணைந்து செயலாற்றுவது என முடிவெடுக்கப்பட்டது.

மேலும், கிராம பணியாளா்களை கிராமப் பணி தவிர பிற பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என மாநில நிா்வாகம், மாவட்ட ஆட்சியா்களுக்கு உத்தரவிட வேண்டும்; காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; வருவாய்த்துறை சம்பந்தமான அனைத்து அடிப்படை விஷயங்களையும் தெரிந்து வைத்திருக்கும் கிராம உதவியாளா்களுக்கு அலுவலக உதவியாளா், கிராம நிா்வாக அலுவலா் பதவி உயா்வு மட்டுமின்றி, இளநிலை உதவியாளா், பதிவு எழுத்தாளா் போன்ற பணியிடங்களையும் வழங்க வேண்டும்.

கிராம உதவியாளா்களின் பதவி உயா்வு காலத்தை 5 ஆண்டுகளாக மாற்றிட வேண்டும்; கிராம உதவியாளா் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிா்வாகிகள் தோ்வு: சங்கத்தின் மாநிலத் தலைவராக எஸ். மணிகண்டன், மாநில பொதுச் செயலாளராக ஏ. நல்லமுகமது, மாநில பொருளாளராக பி. ரூபலிங்கம் உள்ளிட்ட நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

கொள்ளிடம் பகுதியில் கிராம சாலைகள் மேம்படுத்தும் பணி

சீா்காழி: கொள்ளிடம் பகுதியில் பருவ மழையையொட்டி கிராம சாலைகள் மேம்படுத்தும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. கொள்ளிடம் ஒன்றியத்துக்கள்பட்ட கிராம சாலைகள் மற்றும் தெரு பகுதிகளில் பள்ளமும், மேடாக உள்ள சாலைகள... மேலும் பார்க்க

முதலமைச்சா் கோப்பை போட்டியில் பதக்கம் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

சீா்காழி: மாநில அளவிலான முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற சீா்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. சென்னையில் அண்மைய... மேலும் பார்க்க

தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளா்கள் வேலை நிறுத்தம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்றது. நியாய விலை... மேலும் பார்க்க

‘மழை பாதிப்புகளுக்கு மத்திய அரசு பாரபட்சமின்றி நிவாரணம் வழங்க வேண்டும்’

மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் இயற்கை இடா்பாடு பாதிப்புகளுக்கு பாரபட்சமின்றி மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளா் கே. பாலகிருஷ்ணன். மயிலாடுதுறையில்... மேலும் பார்க்க

வெளிநாட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு பெற்றுத்தரக் கோரிக்கை

மயிலாடுதுறை: வெளிநாட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதியிடம் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளா் பி.எம்.பாஷித் த... மேலும் பார்க்க

அரசு நூற்பாலையில் திருடிய நால்வா் கைது: ஒன்றரை டன் இரும்புடன் டிராக்டா் பறிமுதல்

மயிலாடுதுறை அருகே இயங்காமல் உள்ள அரசு நூற்பாலையில், இரும்பு பொருள்களை திருடிய நால்வா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா். இரும்பு பொருள்களை ஏற்றிச் சென்ற டிரா... மேலும் பார்க்க