செய்திகள் :

கிரிக்கெட் பந்து பட்டு 17 வயது ஆஸ்திரேலிய வீரர் பென் ஆஸ்டின் மறைவு; சோகத்தில் கிரிக்கெட் உலகம்!

post image

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 17 வயதான இளம் கிரிக்கெட் வீரர் பென் ஆஸ்டின், பயிற்சியின்போது தலையில் பந்து பட்டு உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சம்பவ நேரத்தில் பென் ஆஸ்டின் ஹெல்மெட் அணிந்து இருந்தாலும், பந்து அவரது தலைக்கும் கழுத்துக்கும் இடையில் பட்டத்தில் உடனே மயங்கி விழுந்திருக்கிறார். மருத்துவக் குழு ஓடி வந்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றது. ஆனால் அங்கு சிகிச்சையின்போது பென் ஆஸ்டினின் உயிர் பிரிந்தது.

தலையில் கிரிக்கெட் பந்து பட்டு உயிரிழந்த பென் ஆஸ்டின் (17)
பென் ஆஸ்டின் (17)

17 வயதேயாகும் பென் ஆஸ்டின் கிரிக்கெட் மட்டுமல்ல, கால்பந்து மற்றும் பிற விளையாட்டுகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்று கூறப்படுகிறது. எந்த விளையாட்டானாலும் துறுதுறுவென திறமையோடு விளையாடுபவர் என அவரது கிரிக்கெட் கிளப்பினர் கூறுகின்றனர்.

பெர்ண்ட்ரீ கழி, மல்க்ராவ், ஈல்டன் பார்க் ஆகிய கிளப்புகளுடன் பல 18 வயதிற்குட்பட்ட மேட்ச்சை ஆடி கவனம் ஈர்த்திருக்கிறார். திறமைமிக்க விளையாட்டு வீரரை இழந்துவிட்ட அவரது கிரிக்கெட் கிளப்பினர், நண்பர்கள், குடும்பத்தினர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

2014-ம் ஆண்டில் 25 வயதான ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸ், சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஷெஃபெல்டு ஷீல்டு போட்டியின் போது, தலைக்கு வந்த நீளமான வீச்சு பந்தை புள் ஷாட் ஆட முயன்று, தவறியதில் பந்து தலையில் பலமாகப் பட்டு மைதானத்திலேயே அப்படியே சாய்ந்தது நினைவிருக்கலாம். ஹெட்மெட் அணிந்திருந்தும் தலைக்கும் கழுத்திற்கும் இடையில் பந்து பட்டதில் பிலிப் ஹியூஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.

பிலிப் ஹியூஸ் (25), பென் ஆஸ்டின் (17)

இந்த துயரான சம்பவம் கிரிக்கெட் உலகத்துக்கு மிகப்பெரிய அதிர்ச்சி அளித்தது. இப்போது அதே அஸ்திரேலியாவில் 17 வயதான இளம் கிரிக்கெட் வீரர் பென் ஆஸ்டின், பயிற்சியின்போது தலையில் பந்து பட்டு உயிரிழந்திருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஐசிசி இதை துக்கமாக அனுசரித்து அஞ்சலி செலுத்தியிருக்கிறார். மேலும், பல்வேறு நாடுகளின் கிரிக்கெட் கிளப்களும் பென் ஆஸ்டினுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறது.

``திருமணத்திற்குப் பிறகு கோலியிடம் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன" - முன்னாள் சக வீரர் பகிர்வு

விராட் கோலி, கிரிக்கெட் உலகில் இந்தியாவைக் கடந்து உலக அளவில் பல தசாப்தங்களுக்கு ஒலிக்கும் பெயர்.சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களில் சதமடித்திருக்கும் சச்சினின் சாதனையை முறியடிக்கும் ஒரே வீரராகப் பார்க்கப... மேலும் பார்க்க

Pratika Rawal: ஜெய்ஷா அனுப்பிய மெஸ்ஸேஜ்; பதக்கத்தை உறுதி செய்த வீராங்கனை!

இந்திய மகளிர் அணியின் ஓப்பனிங் பேட்டர் பிரதிகா ரேவால் (Pratika Rawal) தான் ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 வெற்றியாளர்களுக்கான பதக்கத்தைப் பெறுவதை சமீபத்திய நேர்காணலில் உறுதிபடுத்தியுள்ளார். உலகக் கோப்... மேலும் பார்க்க

`ஷமியின் கரியரை முடிக்கும் BCCI தேர்வுக் குழு’ - வெளிப்படையாக பேசிய பெர்சனல் கோச்!

2023-ல் சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா இறுதிப்போட்டி வரை சென்றதென்றால் அதற்கு முக்கிய காரணமானவர்களில் ஒருவர் முகமது ஷமி.வெறும் ஏழே போட்டிகளில் 10.7 ஆவரேஜில் மூன்று முறை ... மேலும் பார்க்க

`தோனி ஓய்வு பெறுகிறாரா?' - சிஎஸ்கே காசி விஸ்வநாதனின் 'சிக்ஸர்' பதில்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றாலும் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு வரை சிஎஸ்கே கேப்டனாக இருந்த தோனி,... மேலும் பார்க்க

மும்பை: மேளதாளம், கரகோஷம், ரோஜா மழை; பயிற்சியாளருக்கு உள்ளூர்வாசிகள் உற்சாக வரவேற்பு!

மும்பை புறநகரில் உள்ள வில்லே பார்லேவில் வசிக்கும் மக்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்த அமோல் மஜும்தார் பயிற்சியாளராக இந்திய பெண்கள் அணியை உலகக் கோப்பை வெல்லச் செய்து திரும்பியதை கோலாகலமாகக் கொண்டாடியுள்ளனர... மேலும் பார்க்க