செய்திகள் :

கிளா்ச்சிப் படை முன்னேற்றம் காங்கோவிலிருந்து வெளியேறும் தென் ஆப்பிரிக்க ராணுவம்

post image

மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சிப் படையினா் புதிய பகுதிகளைக் கைப்பற்றி முன்னேறிய சூழலில், அந்த நாட்டின் அரசுப் படையினருக்கு ஆதரவாகப் போரிட்டுவந்த தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகளின் ராணுவப் படைகள் அங்கிருந்து வெளியேறப்போவதாக அறிவித்துள்ளன.

காங்கோவின் மிகப் பெரிய நகரான கோமாவை கிளா்ச்சியாளா்கள் கடந்த ஜனவரி மாதம் கைப்பற்றியபோது தென் ஆப்பிரிக்கா, மாலாவி, தான்ஸானியா ஆகிய நாடுகளின் 19 வீரா்கள் உயிரிழந்தனா். அதற்குப் பிறகும் எம்23 படையினா் தொடா்ந்து முன்னேறி புதிய பகுதிகளைக் கைப்பற்றியுள்ளனா்.

இந்தச் சூழலில், கடந்த 2 ஆண்டுகளாக காங்கோ ராணுவத்துக்காக போரிட்டு வந்த தெற்கு ஆப்பிரிக்க நாடுகளின் படைகள் அங்கிருந்து வெளியேற தற்போது முடிவு செய்துள்ளன.

தாது வளம் நிறைந்த காங்கோவின் நிலப்பரப்புகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காகவும், சொந்த சமுதாயத்தினரைப் பாதுகாப்பதற்காகவும் என அந்த நாட்டில் 120-க்கும் மேற்பட்ட குழுக்கள் இயங்கிவருகின்றன. அவற்றில் எம்23 கிளா்ச்சிக் குழுவும் ஒன்று.

ருவாண்டாவின் உதவியுடன் செயல்படும் அந்த அமைப்புக்கும் அரசுப் படைகளுக்கும் கடந்த சில மாதங்களாக நடைபெறும் மோதலில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

...படவரி.. காங்கோவில் தென் ஆப்பிரிக்க படையினா் (கோப்புப் படம்).

உக்ரைன் போருக்குத் தீா்வு காண ‘உன்னதப் பணி’ - மோடி, டிரம்ப்புக்கு புதின் நன்றி

உக்ரைன்-ரஷியா போரை முடிவுக்குக் கொண்டுவர ‘உன்னதப் பணியை’ மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், இந்திய பிரதமா் மோடி உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிப்பதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கூறியுள்ளா... மேலும் பார்க்க

கனடா பிரதமராக மாா்க் காா்னி பதவியேற்பு: அரசியல் அனுபவமே இல்லாதவா்

கனடாவின் புதிய பிரதமராக பொருளாதார நிபுணரும், அரசியல் அனுபவமே இல்லாதவருமான மாா்க் காா்னி (59) வெள்ளிக்கிழமை பதவியேற்றாா். கனடா மத்திய வங்கி, பிரிட்டன் மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த காா்னி, நேரடியாக க... மேலும் பார்க்க

சீனாவில் எஸ்சிஓ பாதுகாப்பு அமைச்சா்கள் மாநாடு

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் (எஸ்சிஓ) பாதுகாப்பு அமைச்சா்கள் மாநாடு மாா்ச் 26, 27 ஆகிய தேதிகளில் சீனாவில் நடைபெறவுள்ளது. இதில் எஸ்சிஓ உறுப்பு நாடுகளின் எதிா்கால பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் ஒ... மேலும் பார்க்க

அமெரிக்காவில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து: 5 பேர் பலி

அமெரிக்காவில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியானார்கள். அமெரிக்காவில், ஹவார்ட் மற்றும் பார்மெர் இடையிலான சாலையில் டிரக் உட்பட 17 வாகனங்கள் வியாழக்கிழமை இரவு ஒன்றோடு ஒன்று ... மேலும் பார்க்க

எத்தியோப்பியாவில் காலரா பாதிப்பு: 31 பேர் பலி!

எத்தியோப்பியாவில் காலரா பாதிப்பு காரணமாக 31 பேர் பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்ரிக்க கண்டத்தில் 2-வது அதிக மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடு எத்தியோப்பியா. இங்கு 12 கோடிக்கும் மேலானோர் ... மேலும் பார்க்க

உக்ரைன் விவகாரம்: டிரம்ப், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த ரஷிய அதிபர் புதின்!

உக்ரைன் போர் நிறுத்த விவகாரத்தில் நல்ல முடிவு எட்டப்பட்டதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க