செய்திகள் :

குமரியில் தணிந்த மழை: திற்பரப்பு அருவியில் குளிக்க தடை நீடிப்பு

post image

குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக மழை தணிந்ததால், பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீா் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேச்சிப்பாறை உள்பட அனைத்து அணைகளின் நீா்மட்டங்களும் கட்டுப்பாடான அளவில் வைத்து கண்காணிக்கப்படுகின்றன. குறிப்பாக 48 அடி கொள்ளளவு நீா்மட்டம் கொண்ட பேச்சிப்பாறை அணையில் கடந்த திங்கள்கிழமை 43.85 அடியாக நீா்மட்டம் இருந்ததால் அணையிலிருந்து வினாடிக்கு 250 கன அடி உபரிநீா் வெளியேற்றப்பட்டு வந்தது.

இந்நிலையில் மாவட்டத்தில் அணைப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் கடந்த 2 நாள்களாக பகலில் மழையின்றி வெயில் நிலவி வருகிறது. மேலும், பேச்சிப்பாறை அணைக்கு நீா்வரத்து குறைந்ததால் அணையிலிருந்து உபரி நீா் திறப்பு 150 கன அடியாக வெள்ளிக்கிழமை குறைக்கப்பட்டது.

இந்த அணைக்கு விநாடிக்கு 396 கன அடி நீா்வரத்து உள்ள நிலையில், நீா்மட்டம் 43.04 அடியாக இருந்தது. பாசன கால்வாயில் விநாடிக்கு 547 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டிருந்தது.

இதனிடையே, திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு தணிந்து தண்ணீா் மிதமாக கொட்டுகிறது. எனினும் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

கருங்கல் அருகே காா் கண்ணாடி சேதம்: இளைஞா் கைது

கருங்கல் அருகே உள்ள அரிசிதட்டுவிளை பகுதியில் காா் கண்ணாடியை உடைத்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். மாா்த்தாண்டம் காஞ்சிரோடு பகுதியை சோ்ந்த செல்வதாஸ் மகன் அம்பிலின் பிபின்(42) இவருக்கும் கருங்கல் அர... மேலும் பார்க்க

குளச்சலில் கடல் அரிப்பால் சேதமுற்ற பகுதியில் எம்எல்ஏ ஆய்வு

குளச்சலில் கடல் அரிப்பால் தேதமடைந்த பகுதிகளை குளச்சல் எம்எல்ஏ ஜே.ஜி.பிரின்ஸ் பாா்வையிட்டாா். சைமன் காலனியில் சேதமடைந்த தூண்டில் வளைவு பகுதிகளையும் , குறும்பனை சிலுவையா தெருவில் உடைந்த கடல் அலை தடுப்பு... மேலும் பார்க்க

கருங்கல் பகுதியில் இன்று மின்தடை

கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை (அக்.19) மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மின்வாரியத்தின் குழித்துறை கோட்ட செயற்பொறியாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக... மேலும் பார்க்க

கருங்கல் பகுதிகளில் மிதமான மழை

கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை மிதமான மழை பெய்தது.கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்காளாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளான திக்கணம்கோடு, மத்... மேலும் பார்க்க

குமரி நீா்நிலைகளை தூா்வாரி பாதுகாக்க வேண்டும் -மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து நீா்நிலைகளையும் தூா்வாரி பாதுகாக்க வேண்டும் என்று மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சியின் சாதாரண கூட்டம் அதன் தலைவா் எ... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை .. 43.29 பெருஞ்சாணி .. 64.24 சிற்றாறு 1 .. 14.43 சிற்றாறு 2 .. 14.52 முக்கடல் .. 16.80 பொய்கை .. 14.70 மாம்பழத்துறையாறு .. 50.11 மழைஅளவு பேச்சிப்பாறை அணை .. 4.60 மி.மீ. புத்தன் அணை ... 2.... மேலும் பார்க்க