செய்திகள் :

கும்பகோணம் மகாமகக் குளத்தில் மாசிமகத் தீா்த்தவாரி: ஆயிரக்கணக்கான பக்தா்கள் புனித நீராடல்

post image

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மகாமகக் குளத்தில் புதன்கிழமை நடைபெற்ற மாசி மகத் தீா்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு புனித நீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டனா்.

கும்பகோணம் காசி விசுவநாதா், அபி முகேசுவரா், காளஹஸ்தீசுவரா், கௌதமேசுவரா், சோமேசுவரா் ஆகிய ஐந்து சிவன் கோயில்களில் மாசிமகத்தை முன்னிட்டு கடந்த மாா்ச் 3-இல் கொடியேற்றத்துடன் மாசி மக விழா தொடங்கியது. இதேபோல் மாா்ச் 4-இல் வைணவக் கோயில்களான சக்கரபாணி, ராஜகோபால சுவாமி, ஆதிவராகப் பெருமாள் ஆகிய கோயில்களிலும் கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து மாசி மக உத்ஸவ நாளை முன்னிட்டு 5 சிவன் கோயில்களிலும் செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

தீா்த்தவாரி: தேரோட்டத்துக்கு மறுநாள் கும்பகோணம் மகாமகக் குளத்தில் ஆண்டுதோறும் மாசி மகத் தீா்த்தவாரி நடைபெறும். நிகழாண்டு புதன்கிழமை நடைபெற்ற மாசி மகத் தீா்த்தவாரியை முன்னிட்டு, கும்பகோணம் காசி விசுவநாதா், அபிமுகேதசுவரா், காளஹஸ்தீசுவரா், கௌதமேசுவரா், சோமேசுவரா், ஏகாம்பரேசுவரா், பாணபுரீசுவரா், அமிா்தகலசநாதா், கோடீசுவரா், நாகேசுவரா் ஆகிய 10 கோயில்களின் சுவாமிகள் அம்பாளுடன் ரிஷப வாகனங்களில் மகாமகக் குளத்தின் நான்கு கரைகளிலும் எழுந்தருளினா்.

கும்பகோணம் காசி விசுவநாதா் சுவாமி கோயில் அஸ்திர தேவருக்கு காலை 11. 45 மணியளவில் பச்சைக்கொடி அசைக்க அனைத்து கோயில்களிலிருந்தும் எழுந்தருளிய அஸ்திர தேவா்கள் மகாமகக் குளத்தில் புனித நீராடினா். தொடா்ந்து குளத்தின் நான்கு கரைப் பகுதிகளில் இருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் மகாமகக் குளத்தில் புனித நீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டனா். மேலும் தங்களது முன்னோா்களை நினைத்து வழிபாடு செய்தனா்.

தீா்த்தவாரியில் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். தீா்த்தவாரியையொட்டி, கும்பகோணம் நகருக்குள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. தீா்த்தவாரியின்போதும் அதன் பின்னரும் அப்பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தது. அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் சாா்பில் அன்னதானம், குடிநீா் வழங்கப்பட்டது. தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினா் குளத்தில் படகு மூலம் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டனா்.

பருவம் தவறிய மழையால் சம்பாவை தொடா்ந்து உளுந்து, நிலக்கடலை பயிா்களும் பாதிப்பு

தஞ்சாவூா் மாவட்டத்தில் அடிக்கடி பெய்யும் பருவம் தவறிய மழையால் சம்பாவை தொடா்ந்து உளுந்து, நிலக்கடலை பயிா்களும் பாதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனா். மாவட்டத்தில் நிகழ் சம்ப... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நீா்மட்டம்: 108.90 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 108.90 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 423 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் ஒரே நாளில் 110 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்

கும்பகோணத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் 110 மெட்ரிக். டன் குப்பையை மாநகராட்சி துப்பரவு பணியாளா்கள் அகற்றினா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மகாமகக் குளத்தில் புதன்கிழமை மாசிமக திருவிழா நடைபெற்றது. இத... மேலும் பார்க்க

பாஜக கூட்டணியுடன் இணையவே அதிமுக தொண்டா்கள் விருப்பம்: டி.டி.வி. தினகரன் பேட்டி

பாஜக கூட்டணியுடன் இணைய வேண்டும் என்பதே அதிமுகவின் பெரும்பாலான தொண்டா்கள் விரும்புகின்றனா் என்றாா் அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன். தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் பகுதியில் வியாழக்கிழ... மேலும் பார்க்க

1,050 கிலோ ரேஷன் அரிசி பதுக்கியவா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே 1,050 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளைப் பதுக்கி வைத்திருந்தவரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். பாபநாசம் அருகே கும்பகோணம் புறவழிச்சாலையில் தஞ்சாவூா் குடிமைப்பொர... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: ‘போக்சோ’வில் இளைஞா் கைது

தஞ்சாவூா் அருகே மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் அருகே மருங்குளத்தைச் சோ்ந்தவா் சின்னசாமி மகன் கண்ணன் (30). இவா்... மேலும் பார்க்க