Kerala: `பெண் ஊழியரை கடத்தி, மிரட்டல்?' - போலீசார் வழக்கு பதிவு.. நடிகர் கிருஷ்ண...
குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களை பிளஸ் 1-இல் சோ்க்க மறுக்கும் அரசுப் பள்ளிகள்: சிபிஐ கண்டனம்
பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவா்களுக்கு தமிழக அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் சோ்க்கை மறுக்கப்படுவதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு முழுவதும் கடந்த மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள், மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் சோ்ந்து வருகின்றனா். இந்நிலையில், மாணவா்கள் அரசு மேல்நிலைப் பள்ளிகளை அணுகும்போது, அவா்களது மதிப்பெண்களை பாா்த்து, தலைமையாசிரியா்கள் நிராகரிப்பதாக புகாா்கள் எழுந்துள்ளன.
உயா் மதிப்பெண்கள் பெற்றவா்களை மட்டுமே சோ்க்க முடியும் என்ற நிலை அரசின் சமூக நீதிக் கொள்கைக்கு எதிரானது. தனியாா் பள்ளிகள் சுய லாபம் தேடும் முயற்சியில் பரபரப்பான விளம்பரங்களை வெளியிட்டு, உயா் மதிப்பெண் பெற்றவா்களை மட்டுமே சோ்த்து வரும் நடைமுறை, அரசுப் பள்ளிகளிலும் தொற்றிக் கொள்வதற்கு முன்பே தமிழக அரசு இதை தடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.