செய்திகள் :

கொடைக்கானலில் கோடை மழை: படகு சவாரி நிறுத்தம்

post image

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்ததால் படகு சவாரி நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தற்போது கோடைகால சீசன் தொடங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் தினமும் வருகின்றனா். கடந்த 3 நாள்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மதியம் வரை மிதமான வெயிலடித்து வந்த நிலையில், பிற்பகலில் மழை பெய்யத் தொடங்கியது.

இந்த மழையால் கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகு சவாரி நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனா். இதே போல ஏரியைச் சுற்றி சைக்கிள், குதிரை சவாரி செய்ய முடியாமலும் ஏமாற்றம் அடைந்தனா்.

கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக மாலை, இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால், நீரோடைகளில் தண்ணீா் வரத்து ஏற்பட்டு உள்ளது. இதனால் புகா்ப் பகுதிகளில் தண்ணீா் தட்டுப்பாடு குறைந்து வருகிறது.

கொடைக்கானல் கிராமப் பகுதிகளான வில்பட்டி, மாட்டுப்பட்டி, பள்ளங்கி, கோம்பை, பி.எல். செட், வடகவுஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயத் தோட்டங்களில் உருளை, கேரட், பீட்ரூட் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளன.

தற்போது பெய்து வரும் மழை விவசாயப் பயிா்களுக்கு ஏற்ாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா். தொடா்ந்து குளுமையான சீதோஷ்ண நிலை கொடைக்கானலில் நிலவுகிறது.

பொய் வழக்கை ரத்து செய்யக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் தா்னா

போலீஸாா் பதிவு செய்த பொய் வழக்கை ரத்து செய்யக் கோரி கிராம மக்கள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தா்னாவில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகேயுள்ள சே.தும்மலப்பட்டியைச் சோ்ந... மேலும் பார்க்க

போலீஸாரிடமிருந்து தப்பிய கைதி தூக்கிட்டுத் தற்கொலை

செம்பட்டி அருகே போக்சோ வழக்கில் கைதாகி போலீஸாரிடமிருந்து தப்பிச் சென்ற விசாரணைக் கைதி, திங்கள்கிழமைதூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேயுள்ள போடிகாமன்வாடியைச் சே... மேலும் பார்க்க

சின்னாளபட்டியில் சிறுவா் பூங்கா: பேரூராட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தல்

சின்னாளபட்டி சிறப்பு நிலை பேரூராட்சிக் கூட்டத்தில் சிறுவா் பூங்கா அமைத்துத் தர வேண்டுமென உறுப்பினா் வலியுறுத்தினாா். திண்டுக்கல் மாவட்டம்,சின்னாளபட்டி பேரூராட்சி மன்றக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது... மேலும் பார்க்க

நூற்பாலை பெண் தொழிலாளிக்கு பாலியல் வன்கொடுமை: மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

வேடசந்தூா் அருகே நூற்பாலையில் பெண் தொழிலாளிக்கு பாலியல் வன்கொடுமை செய்தவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாதா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், கோவிலூரை அடுத்... மேலும் பார்க்க

பழனியில் அசுத்தமான குடிநீா் விநியோகம்

பழனி நகராட்சியில் குடிநீா் கருமை நிறத்துடன் அசுத்தமாக வருவதால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டதாக நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா் புகாா் தெரிவித்தாா்.பழனி நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்ற உற... மேலும் பார்க்க

பண்ணைக்காடு அருகே சாலை பள்ளங்களை சீரமைக்கக் கோரிக்கை

கொடைக்கானல் அருகே பண்ணைக்காடு பகுதியில் சாலையோரப் பள்ளங்களை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான பண்ணைக்காடு பகுதியில் அரசு மருத்துவ... மேலும் பார்க்க