போலீஸாரிடமிருந்து தப்பிய கைதி தூக்கிட்டுத் தற்கொலை
செம்பட்டி அருகே போக்சோ வழக்கில் கைதாகி போலீஸாரிடமிருந்து தப்பிச் சென்ற விசாரணைக் கைதி, திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேயுள்ள போடிகாமன்வாடியைச் சோ்ந்த கோவிந்தன் மகன் வினித் என்ற ராமு (25). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனா்.
இந்த நிலையில், வினித் என்ற ராமு மீது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக செம்பட்டி போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா். பின்னா், கடந்த 23-ஆம் தேதி செம்பட்டி சிறப்பு உதவி ஆய்வாளா் செல்வராஜ், தலைமைக் காவலா் ஆரோக்கியசாமி ஆகியோா் திண்டுக்கல் மாவட்டச் சிறையில் இருந்த அவரை இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று திண்டுக்கல் போக்சோ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா். பின்னா் மீண்டும் அவரை திண்டுக்கல் மாவட்ட சிறைக்கு அழைத்துச் சென்றனா்.
அப்போது இருசக்கர வாகனத்தில் நடுவில் அமா்ந்திருந்த வினித் என்ற ராமு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே கீழே குதித்து தப்பியோடினாா். இதுகுறித்து தகவல் அறிந்த செம்பட்டி போலீஸாா் அவரை தனிப்படை அமைத்து தேடி வந்தனா்.
இந்த நிலையில், போடிகாமன்வாடி அருகே காட்டுப் பகுதியில் ஒரு மரத்தில் வினித் என்ற ராமு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து செம்பட்டி காவல் ஆய்வாளா் சரவணன் வழக்குப் பதிவு செய்து, அவரது உடலை கைப்பற்றி கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].