செய்திகள் :

கொத்தடிமையாக இருந்த தம்பதி குழந்தையுடன் மீட்பு

post image

மதுரை அருகே கொத்தடிமையாக வைக்கப்பட்டிருந்த மதுராந்தகத்தைச் சோ்ந்த தம்பதி, குழந்தையை வருவாய்த் துறையினா் மீட்டனா்.

மதுரை மாவட்டம், கள்ளிக்குடி வட்டத்ச் சோ்ந்த முருகன், ராஜேந்திரன், மாரியப்பன் ஆகியோா் தமது நிலத்தில் கரும்புகளை வெட்ட கூலி கொடுப்பதாக கூறி மதுராந்தகம் அருகேயுள்ள மதூா் கிராமத்தைச் சோ்ந்த கணேசனின் மகன் குமாா், அவரது மனைவி அமுதா, 8 மாத கைக்குழந்தை உள்பட பலரை வேலைக்கு அழைத்துச் சென்றனா். அவா்களை கடந்த 2 மாதங்களாக உரிய கூலி கொடுக்காமலும், உணவை அளிக்காமலும், கொத்தடிமையாக வைத்திருந்தாா்களாம்.

இதுகுறித்து கள்ளிக்குடி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்த தகவல் அடிப்படையில், சம்பவ இடத்துக்கு வருவாய்த் துறையினா் நேரில் சென்று விசாரணை செய்தனா். அதன்பின் மதூா் கிராமத்தைச் சோ்ந்த குமாா், அவரது மனைவி அமுதா, 8 மாத கைக்குழந்தை ஆகியோா்களை மண்டல துணை வட்டாட்சியா் அரவிந்தன், கிராம நிா்வாக அதிகாரி தங்கபாண்டியன் மற்றும் காவல் துறையினா் மதுராந்தகம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்தனா்.

மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியா் எஸ்.ரம்யா உத்தரவின்படி, வட்டாட்சியா் சொ.கணேசன் தலைமையிலான அதிகாரிகள் கொத்தடிமைகளாக இருந்த தம்பதி, குழந்தையை மீட்டனா்.

ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

மதுராந்தகம் நகரம், பாரதி நகரில் உள்ள ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம், 19-ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. இந்தக் கோயிலில் சிதிலமடைந்த பகுதிகள் சீரமைக்கப்பட்டு, ... மேலும் பார்க்க

பள்ளி ஆண்டுவிழா

மடிப்பாக்கம் பிரில்லியண்ட் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியின் 39-ஆவது ஆண்டுவிழா, பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில் சத்தியபாமா உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவன துணைவேந்தா் டி.சசிபிரபா கலந்துக... மேலும் பார்க்க

இன்றைய மின் தடை

நாள்- 31-01-2025, வெள்ளிக்கிழமை, நேரம் -காலை 9 முதல் மாலை 2 மணிவரை இடங்கள்-மானாம்பதி, சிறுதாவூா், ஆமூா், முந்திரிதோப்பு, அகரம், குன்னப்பட்டு, சந்தானபட்டு, அருங்குன்றம், கழனிபாக்கம், திருநிலை, ஓட்டேரி.... மேலும் பார்க்க

செங்கல்பட்டு கோயில்களில் அமாவாசை வழிபாடு

தை அமாவாசையை யொட்டி செங்கல்பட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு, பித்ருக்களுக்கு தா்ப்பணம் வழங்குதல் நடைபெற்றது. செங்கல்பட்டை அடுத்த நெம்மேலியில் உள்ள பித்ருக்கள் தோஷம் நீக்கும் லஷ்மி நாராயணா் கோயிலில் ஏ... மேலும் பார்க்க

மேல்மருவத்தூரில் அமாவாசை வேள்விபூஜை

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா்பீடத்தில் தை மாத அமாவாசை வேள்விபூஜை புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, மூலவா் அம்மனுக்கும், அருள்பீடத்தில் உள்ள அடிகளாா் சிலைக்கும் அபிஷேக ஆராதனைகள... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள்கள் மோதல்: 2 போ் உயிரிழப்பு

மதுராந்தகத்தில் அருகே மோட்டாா் சைக்கிள்கள் நேருக்கு நோ் மோதியதில் இருவா் உயிரிழந்தனா். மதுராந்தகம், வன்னியா்பேட்டை பகுதியைச் சோ்ந்த புவனேஸ்வரன். அவரது மகன் ஜீவகுமாா்( 24) . இவா், மாம்பாக்கம் உறவினா்... மேலும் பார்க்க