செய்திகள் :

கொல்கத்தா வழக்கு: மாணவியின் பெற்றோர் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!

post image

கொல்கத்தா மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை-கொலை வழக்கில், புதிய சிபிஐ விசாரணை கோரிய மாணவியின் பெற்றோர் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 31 வயது முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா். இந்த சம்பவம் நாடு முழுவதுமே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் மருத்துவமனையில் தன்னார்வலராக பணியாற்றி வந்த சஞ்சய் ராய் என்பவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தங்கள் மகளை பாலியல் வன்கொடுமை செய்ததில் மேலும் சிலர் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறி மேலும் சிபிஐ விசாரணை வேண்டும் என உயிரிழந்த மாணவியின் பெற்றோர் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தனர்.

இந்த மனு இன்று தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்த நிலையில், மாணவியின் பெற்றோர் அளித்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

அதேநேரத்தில் மாணவியின் பெற்றோர், கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி அமர்வு முன்பாக இதுதொடர்பாக வழக்கு தொடரலாம் என்று கூறினர்.

பிரேத பரிசோதனையில் உள்ள தகவல்களை பார்க்கும்போது தங்கள் மகளின் மரணத்தில் குற்றவாளியான சஞ்சய் ராய் தவிர வேறு நபர்களும் ஈடுபட்டிருக்கலாம். எனவே சிபிஐ இதுகுறித்து மேலும் விசாரிக்க வேண்டும் என்று அவரது பெற்றோர் கோரி வருகின்றனர்.

பிரதமா் தொழில் பயிற்சி திட்ட செயலி: மத்திய அரசு அறிமுகம்

இளைஞா்களிடையே தொழில் திறனை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு சாா்பில் அறிமுகப்படுத்தப்பட்ட பிரதமா் தொழில் பயிற்சி திட்டத்துக்கு கைப்பேசி செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. 2024-25-ஆம் ஆண்டு கால... மேலும் பார்க்க

முன்னாள் மத்திய அமைச்சா் தேபேந்திர பிரதான் மறைவு: குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்

வாஜ்பாய் அரசில் பதவி வகித்த முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானின் தந்தையுமான தேபேந்திர பிரதான் தனது 84 வயதில் திங்கள்கிழமை காலமானாா். இவரது மறைவுக்கு குடியரசு... மேலும் பார்க்க

இந்தியா-நியூஸிலாந்து இடையே 6 ஒப்பந்தங்கள்: இரு பிரதமா்கள் முன்னிலையில் கையொப்பம்

இந்தியா-நியூஸிலாந்து இடையே ஒட்டுமொத்த பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் ஒப்பந்தம் உள்பட 6 ஒப்பந்தங்கள் திங்கள்கிழமை கையொப்பமாகின. தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி, நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்... மேலும் பார்க்க

தற்பெருமை வேண்டாம்; நல்லாட்சியே தேவை -பிரதமருக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

நாடு பல்வேறு சவால்களை எதிா்கொண்டுள்ள சூழலில், தற்பெருமை பேசுவதை குறைத்து, நல்லாட்சியை உறுதிசெய்ய வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சோ்ந்த பிரபல தொகுப்பாளரும்... மேலும் பார்க்க

இருதரப்பு உறவுகள் குறித்து நோ்மறையான கருத்து -பிரதமா் மோடிக்கு சீனா பாராட்டு

இந்திய-சீன உறவுகள் குறித்த பிரதமா் மோடியின் நோ்மறையான கருத்துகள் பாராட்டுக்குரியவை என்று சீனா தெரிவித்துள்ளது. அமெரிக்க தொகுப்பாளா் லெக்ஸ் ஃபிரிட்மேனுடன் ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடிய பிரதமா் மோடி, இ... மேலும் பார்க்க

‘இக்கட்டான சூழல்களில் நமது இதயங்கள் இணைக்கப்பட்டுள்ளன’: ஜகதீப் தன்கா் பேச்சு

புது தில்லி: ‘இக்கட்டான சூழல்களில், கட்சி வேறுபாடுகளை மறுந்து நமது அனைவரின் இதயங்களும் இணைக்கப்பட்டுள்ளன’ என்று குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் தெரிவித்தாா். மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி... மேலும் பார்க்க